மாகாணசபை முறை தீர்வாகாது நீரூபித்துள்ளது வடக்கு

Published By: Raam

14 May, 2016 | 07:11 PM
image

நேர்காணல் : ரொபட் அன்டனி

கேள்வி : மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்குள் தலை­மைத்­துவ பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ள­தாக  பர­ப­ரப்­பாக செய்­திகள் வரு­கின்­ற­னவே? 

பதில் : அப்­ப­டி­யெல்லாம் ஒன்றும் இல்லை. எமது கட்சி மிகவும் ஒற்­று­மை­யாக செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. கடந்த காலத்தில் சர்­வா­தி­கார ஆட்­சியை அனு­ர­கு­மார திசா­நா­யக்க தலை­மை­யி­லான மக்கள் விடு­தலை முன்­ன­ணியே வீட்­டுக்கு அனுப்­பி­யது. எனவே அதனை சகித்துக்­கொள்ள முடி­யாத  தோல்­வி­யுற்­ற­வர்கள் தற்­போது எமது கட்­சியை விமர்­சித்­து­வ­ரு­கின்­றனர். வீண் குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி வரு­கின்­றனர். 

கேள்வி : தோல்­வி­ய­டைந்த சக்­திகள் இவ்­வாறு செய்­வ­தாக நீங்கள் கூறி­னாலும் ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ள­னவே?

பதில் : அந்த ஊடகம் பற்றியும் எமக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்­டு­க­ளையும் சேறு பூசும் நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­கின்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் பற்­றியும் எமக்கு நன்­றா­கவே தெரியும். 

கேள்வி : ஜே.வி.பி. அர­சாங்­கத்தை பாது­காப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றதே?

பதில் : அர­சாங்­கத்தை பாது­காக்க வேண்­டிய அவ­சியம் எமக்­கில்லை. நாங்கள் எந்­த­வொரு கட்­சி­யையும் பாது­காக்க மாட்டோம். மக்­க­ளுக்கு சேவை­யாற்­று­வதே எமது நோக்­க­மாகும். அத­னையே செய்து வரு­கிறோம். 

கேள்வி : ஜே.வி.பி. தலை­வ­ருக்கு அல­ரி­மா­ளி­கையில் ஒரு அறை இருப்­ப­தாகவும் இர­க­சிய டீல் உள்­ள­தா­கவும் குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றதே?

பதில் : இவ்­வாறு அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றனர். அதா­வது பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி என்ற அடிப்­ப­டையில் நாங்கள் முன்­னெ­டுக்­கின்ற வேலைத்­திட்­டங்­களை பார்த்து தாங்கிக் கொள்ள முடி­யா­ம­லேயே இவ்­வாறு குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றனர். ஆனால் நாங்கள் யாரென்று மக்­க­ளுக்கு தெரியும். மக்கள் எம்­முடன் இருக்­கின்­றனர். நாங்கள் மிகவும் ஒற்­று­மை­யாக எமது பய­ணத்தை முன்­னெ­டுக்­கிறோம். 

கேள்வி : ஒரு குறிப்­பிட்ட அர­சியல் கட்சி உங்­க­ளுக்கு எதி­ராக சேறு பூசும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளது என்று கூறு­கி­றீர்­களா?

பதில் : ஆம், நிச்­ச­ய­மாக அவ்­வாறு கூறு­கிறோம். தோல்­வி­ய­டைந்த ஒரு அர­சியல் அணியே எமக்கு எதி­ராக சேறு பூசும் நட­வ­டிக்­கை­யை மேற்­கொண்டு வரு­கி­றது. இவ்­வாறு சேறு பூசும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு எமது பய­ணத்தை யாரும் தடுக்க முடி­யாது. 

கேள்வி : கடந்த காலங்­க­ளிலும் இவ்­வாறு கட்­சிக்குள் சிக்­கல்கள் ஏற்­பட்­ட­போது ஒன்றும் இல்லை என்று கூறி­னீர்கள்? 

பதில் : அந்த நிலைமை வேறு. தற்­போது மேற்­கொள்­ளப்­படும் சேறு­பூசும் செயற்­பா­டுகள் வேறா­ன­தாகும். இதற்கு முன்னர் எமது கட்­சி­யி­லி­ருந்த பலர் முரண்­பட்டு வெளி­யே­றி­யுள்­ளனர். சிலர் வெளி­யேற்­றப்­பட்­டு­முள்­ளனர். ஆனால்  தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலைமை வித்­தி­யா­ச­மா­ன­தாகும். 

கேள்வி : உங்கள் மன­ச்சாட்­சிக்கு அமை­வாக உங்கள் கட்­சிக்குள் ஒரு பிரச்­சி­னையும் இல்லை என்று கூறு­கி­றீர்­களா? 

பதில் : மன­ச்சாட்­சிக்கு அமை­வா­கவே எமது கட்­சிக்குள் தலை­மைத்­துவம் தொடர்பில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்­லை­யென்று கூறு­கின்றேன். 

கேள்வி : இருந்­தாலும் முன்­னைய ஆட்­சியின் போது நீங்கள் செயற்­பட்ட விதத்­திலும் தற்­போ­தைய ஆட்­சியில் ஜே.வி.பி. செயற்­படும் விதத்­திலும் மாற்­றத்தை நாங்கள் காண்­கிறோம்?

பதில் : அர­சியல் சூழலில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ள­மையே அதற்கு கார­ண­மாகும். அப்­போ­தைய அர­சியல் சூழ­லிலும் தற்­போ­தைய நிலை­யிலும் பாரிய மாற்றம் உள்­ள­தாக அனை­வரும் ஏற்றுக் கொள்­கின்­றனர். 

கேள்வி : முன்னர் மக்­களின் வாழ்க்கை சுமை அதி­க­ரித்தால் மக்கள் விடு­தலை முன்­னணி முத­லா­வ­தாக வீதியில் இறங்கும். இம்­முறை வற்­வரி அதி­க­ரிக்­கப்­பட்டும் கட்சி இன்னும் வீதியில் இறங்­க­வில்லையே?

பதில் : இந்த விட­யத்தை முதன் முதலில் நாட்­டுக்கு கூறி­யதே நாங்கள் தான். எதிர்­வரும் 26 ஆம் திகதி இந்த வற்­வரி அதி­க­ரிப்­புக்கு எதி­ராக பாரிய ஆர்ப்­பாட்டம் ஒன்றை கொழும்பில் நடத்­துவோம். 

கேள்வி : கடந்த காலங்­களில் நீங்கள் செயற்­பட்ட விதத்தை பார்க்­கும்­போது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அதிக ஆச­னங்கள் கிடைக்­கு­மென எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் எதிர்­பார்த்த வாக்­குகள் கிடைக்­க­வில்­லையே?

பதில் : நிச்­ச­ய­மாக நாங்கள் எதிர்­பார்த்த வாக்­குகள் எங்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. நாட்டு மக்கள் எதிர்­பார்த்த முடி­வு­களும் கிடைக்­க­வில்லை. காரணம் கடந்த தேர்­தலில் இறுதித் தரு­ணத்தில் மஹிந்த ராஜ­ப­க் ஷவை தோற்­க­டிக்க வேண்­டு­மென மக்கள் கரு­தி­யதால் அதி­க­மாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாக்­களித்து விட்­டனர். இதனால் எமக்கு எதிர்­பார்த்த வாக்­குகள் கிடைக்­க­வில்லை. 

கேள்வி : அது தொடர்பில் கவ­லை­ய­டை­கின்­றீர்­களா? 

பதில் : அந்த நிலைமை குறித்து மக்கள் இன்று கவ­லை­ய­டை­கின்­றார்கள். சிலர் அழு­கின்­றனர். இப்­படி நடக்கும் என்று தெரிந்­தி­ருந்தால் எங்கள் முடிவு மாறி­யி­ருக்கும் என மக்கள் கூறு­கின்­றனர். 

கேள்வி : கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜே.வி.பி. எடுத்­தி­ருந்த முடிவு எவ்­வா­றா­னது? அதா­வது மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்­காமல் எதிர்ப்பும் தெரி­விக்­காமல் குழப்­பி­விட்­டீர்­களே?

பதில் : இல்லை நாங்கள் அன்று எடுத்த முடிவு சரி­யா­னது என்­பது இப்­போது நிரூ­ப­ண­மா­னது. மஹிந்­தைவை தோற்­க­டிப்போம். ஜன­நா­ய­கத்தை கட்­டி­யெ­ழுப்­புவோம் என்­றுதான் நாங்கள் கூறினோம்.ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் ஜன­நா­யகம் பலப்­படும் என்று நாம் கூற­வில்லை. அதா­வது மஹிந்­தவின் கடையில் பொருட்­களை வாங்க வேண்டாம் என்று கூறிய நாங்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கடையில் உள்ள பொருட்கள் நிச்­சயம் இல்­லா­தவை என்று நாங்கள் கூறினோம். அது இன்று சரி­யா­கி­யுள்­ளது.இது தான் எமது விளக்கம். 

ேகள்வி : நாட்­டிற்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவையா?

பதில் : தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­பா­னது 38 வரு­டங்கள் பழ­மை­யா­கி­விட்­டது. உலகம் மாறி­விட்­டது. எனவே தற்­போ­தைய நிலை­மையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று தேவை­யாகும். தேசிய ஒற்­றுமை மத சக­வாழ்வு பலப்­படும் வகையில் புதிய ஏற்­பா­டுகள் அர­சி­ய­ல­மைப்­புக்கு வர­வேண்டும். 

கேள்வி : இந்த இடத்தில் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் உங்கள் நிலைப்­பாடு என்ன ?

பதில் : ஜன­நா­யகம் பல­ம­டைய வேண்டும், பொரு­ளா­தா­ரத்தில் சம­மான பங்­கீடு இருக்க வேண்டும், இன, மொழி பாகு­பாடு இருக்கக் கூடாது. பொரு­ளா­தார சமத்­து­வத்­தி­லேயே தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு காணப்­ப­டு­கி­றது. இதனை தவிர்த்து எவ்­வா­றான வெளிநாட்டு தீர்­வு­களை இங்கு கொண்டு வந்­தாலும் பொருத்­த­மா­காது. மாறாக தமிழ் மக்கள் தமிழ் மக்கள் என்­பதால் இன்று பல அநீ­தி­களை எதிர்­கொள்­கின்­றனர். அந்த நிலைமை மாற வேண்டும். 

எமது அர­சி­ய­ல­மைப்பில் இலங்­கையின் அரச மொழி­க­ளாக சிங்­களம், ஆங்­கிலம் காணப்­ப­டு­மென்றும் தமிழ் மொழியும் அரச மொழி­யாகும் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதில் தமிழ் மொழியும் அரச மொழி என்று ஏன் குறிப்­பிட வேண்டும். அதா­வது சிங்­களம், தமிழ், ஆங்­கிலம் ஆகிய மூன்று மொழி­களும் இலங்­கையின் அரச மொழி­க­ளாகும் என குறிப்­பிட வேண்டும். இவ்­வாறு பல மாற்­றங்­களை செய்ய வேண்டும். மாகாண சபை முறை­மையும் தீர்­வாக அமை­யாது. 

அத்­துடன் சிலர் கூச்­ச­லி­டு­கின்ற சமஷ்டி முறை­மையும் ஒரு­போதும் தீர்­வாக அமை­யாது. நாட்டை பல துண்­டு­க­ளாக பிரித்து நிர்­வ­கிக்க முடி­யாது. அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற உணர்வு வேண்டும். அந்த வகையில் எமது கட்­சியின் தீர்வு திட்­ட­மாக பூகோளம் மற்றும் குடி பரம்­பலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு கிராம சபை­களை அமைக்க வேண்­டு­மென நாம் கூறி­யி­ருக்­கின்றோம். இந்த கிராம சபைகள் அமைப்­பதன் மூலம் தேசிய பிரச்­சி­னைக்கு விடை காணலாம்.

கேள்வி : இந்த கிரா­மிய சபைகள் எவ்­வாறு இயங்கும்?

பதில் : பூகோளம் மற்றும் குடி பரம்­பலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு கிராம சபை­களை அமைத்து அத­னூ­டாக ஒரு பிர­தி­நிதி பாரா­ளு­மன்றம் செல்­வ­தற்கு வழி­வ­குக்க வேண்டும். இது முழு இலங்­கைக்கும் பொருத்­த­மாகும். இது தொடர்­பாக குழுக்கள் அமைக்­கப்­பட்டு ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு இந்த கிராம சபைகள் அமைக்­கப்­பட வேண்டும். 

கேள்வி : மாகாண சபை­க­ளு­டாக மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­யாதா?

பதில் : அது முடி­யா­தது என்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. மூன்று தசாப்­தங்­க­ளாக மாகாண சபை முறைமை நாட்டில் நடை­மு­றையில் உள்­ளது. ஆனால் அத­னூ­டாக மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­ய­வில்லை. மாகாண சபை­க­ளி­னூ­டாக மேலும் சில அமைச்­சர்கள் உரு­வா­கு­வது மட்­டுமே இடம்­பெற்று வரு­கி­றது. மத்­திய மாகாண சபையின் தமிழ் கல்வி அமைச்சர் இருந்தார். கண்டி, மாத்­தளை, நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் மாண­வர்­க­ளுக்கு என்ன நன்மை கிடைத்­தது? எனவே மாகாண சபை­யா­னது தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வல்ல.

கேள்வி : வட­மா­காண சபையின் இயங்கு நிலை தொடர்பில்?

பதில் : வட­மா­காண சபையின் நிலை­மையை எடுத்துப் பாருங்கள். மத்­திய அர­சாங்கம் அனுப்­பிய நிதியைக் கூட செல­வு செய்யா­மல் உள்­ளனர். மாகாண சபை முறைமை தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு அல்ல என்­பதை வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் நிரூபித்­தி­ருக்­கிறார். வடக்கில் இன்று மீனவர் பிரச்­சினை தலை­வி­ரித்­தா­டு­கி­றது. இது தொடர்பில் வடக்கு முதல்வர் மத்­திய அர­சாங்­கத்­திற்கு கடிதம் எழு­தி­யி­ருப்­பாரா? மாறாக தமது பலத்தை தக்­க­வைக்க மாகாண சபையை பயன்­ப­டுத்தும் நிலை­மையே காணப்­ப­டு­கி­றது.

கேள்வி : ஒரு­வேளை மாகாண சபைக்கு அதி­காரம் போது­மற்­ற­தாக இருக்­கலாம் அல்­லவா? அதி­காரம் இல்­லா­ததால் முத­ல­மைச்சர் இவ்­வாறு செயற்­ப­டலாம் அல்­லவா?

பதில் : இல்லை இல்லை அதி­கா­ரங்கள் போது­மான அளவு உள்­ளன. எந்தக் குறையும் இல்லை. உட­ன­டி­யாக பொலிஸ் அதி­காரம் இல்­லை­யென கூறு­வார்கள். ஆனால் பொலிஸ் அதி­கா­ரத்தை குறைத்தால் பயங்­க­ர­வாத நிலைமை தோன்­றி­விடும். இவை எதிலும் கீழ் மட்­டத்தில் உள்ள மக்­களின் தேவை­களை நிறை­வேற்ற முடி­யாது. 

கேள்வி : அப்­ப­டி­யாயின் நீங்கள் கூறும் கிரா­மிய சபை­களின் ஊடாக மீனவர் பிரச்­சி­னையை தீர்க்க முடி­யுமா?

பதில் : தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வை நோக்­க­மாகக் கொண்டே கிரா­மிய சபை­களை நாம் முன்­வைக்­கின்றோம். மீனவர் பிரச்­சினை என்­பது அதுவும் தேசிய பிரச்­சி­னை­யாகும். 

கேள்வி : அப்­ப­டி­யானால் அதை தீர்க்க வேண்­டி­யது மத்­திய அரசின் கடமை அல்­லவா? 

பதில் : நிச்­ச­ய­மாக அது மத்­திய அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். ஆனால் மத்­திய அர­சாங்­கத்­திற்கு மாகாண சபை அழுத்தம் கொடுத்தி­ருக்க வேண்டும். அதனை செய்­ய­வில்லை. ஆனால் அந்த பொறுப்பை கூட மாகாண சபை செய்­ய­வில்லை என்­பதே எமது குற்றச்சாட்டாகும். 

கேள்வி : தேசிய அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிடைக்கும் என நம்புகிறீர்களா?

பதில் : இந்த அரசாங்கத்தினூடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென நாம் நம்பவில்லை. இது தான் செயற்பாட்டு ரீதியாக எமக்கு தெரிந்த உண்மை.

கேள்வி : காணாமல் போனோர் பிரச்சினை, காணிகளை மீள் வழங்காமை, இராணுவப் பிரசன்னம் என பல பிரச்சினைகள் இன்னும் காணப்படுகின்றன. அவற்றை தீர்க்க என்ன யோசனை முன்வைத்தீர்கள்?

பதில் : நீங்கள் கூறு­கின்ற இந்த அனைத்து பிரச்­சி­னைக்கும் தீர்வை வலி­யு­றுத்தி 2009 ஆம் ஆண்டு நாங்கள் பரிந்­து­ரை­களை முன்­வைத்தோம். வடக்கு, கிழக்கில் சாதா­ரண மக்கள் சமஷ்­டியை கோர­வில்லை. மாறாக அந்த மக்கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வையே கோரு­கின்­றனர். சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்கும் பேசு­வ­தற்­கு­மான சூழலை சாதா­ரண மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர். தற்­போ­தைய அர­சாங்கம் அதனை இன்னும் செய்­ய­வில்லை. உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வினை நிய­மிப்­ப­தாக கூறி­னார்கள். இன்னும் செய்­ய­வில்லை. காணா­மல்­போனோர் தொடர்பில் அலு­வ­லகம் அமைக்­கப்­படும் என்று கூறி­னார்கள். இன்னும் அமைக்­கப்­ப­ட­வில்லை. மக்களை ஏமாற்றுவதையே செய்து கொண்டிருக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்