(எம்.எப்.எம்.பஸீர்)
பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தற்போது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் தடுப்பில், யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் பளை சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனின் வாக்கு மூலம் மற்றும் வேறு சான்றுகளுக்கு அமைய மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இதுவரை இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சட்டவைத்திய அதிகாரி உள்ளிட்ட 7 பேர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பிலிருந்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் இருந்து உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் சிறப்புக் குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
கடந்த 18 ஆம் திகதி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட பளை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்து முதலில் நான்கு பேரை சி.ரி.ஐ.டி.யினர் கைது செய்தனர்.
சின்னமணி நனேஷ்வரன், இரத்தினம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னதுறை, விநாயகமூர்த்தி நெகிலன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
கொழும்பில் இருந்து சென்ற உதவி பொலிஸ் அத்தியட்சர் தலைமையிலான குழு சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் முன்னெடுத்த விசாரணைகளில், பளை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் உட்பட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஏ.கே.47 துப்பாக்கி ஒன்று, அந்த துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரு மெகசின்கள், அத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 120 தோட்டாக்கள், 11 கைக்குண்டுகள், பீ.ஈ.10 ரக வெடிபொருள் என சந்தேகிக்கப்படும் வெடிபொருள் 10 கிலோ, தூரக் காட்டி, புலிகள் மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தும் இரு தொப்பிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டிருந்தன.
அதனை மையப்படுத்தி முன்னெடுத்த மேலதிக விசாரணைகளில் மேலும் இருவரை நேற்று முன்தினம் இரவு சி.ரி.ஐ.டி.யினர் கைது செய்தனர். ரி. நிமலராஜ், ரூபன் ஜதுஷன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களாவர்.
மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு முன்னெடுத் துள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM