"ஜனாதிபதியுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ஐ.தே.க. முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?"

Published By: Vishnu

30 Aug, 2019 | 09:54 AM
image

(நா.தினுஷா)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கும் இடையில் இரகசிய பேச்சுவாரத்தை இடம்பெற்றிருந்தால் அது கட்சிக்கும் ஆதரவாளர்களுக்கும் இழைக்கும் துரோகச் செயல் என்று கூறியிருக்கும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க அந்த உறுப்பனர்களுக்கு எதிராக கட்சி எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை கேட்டு அந்த கட்சியின் பொதுச் செய்லாளர் அகில விராஜ் காரியவசத்துக்கு அமைச்சர் சுஜீவ சேனசிங்க இன்று  கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.  

இந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது ; 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான யோசனையை முன்வைப்பது தொடர்பில் கட்சியின் முக்கியமான அங்கத்தவர்கள் சிலர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து  கலந்துரையாடியள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிகியிருந்தன.  

ஐக்கிய தேசிய கட்சியின்  செயற்குழு அல்லது பாராளுமன்றக் குழுவின் அனுமதியின்றி  அந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து உங்களின் நிலைபாட்டை அறிந்துக்கொள்ள விரும்புகிறேன்.  

அவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெற்றிருக்குமாக இருந்தால்  அந்த பேச்சுவாரத்தையில் பங்கு பற்றியிருந்த தரப்பினருக்கு எதிராக  கட்சியின் விதிமுறைகளுக்கு அமைய எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள்  தொடர்பில்  தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20
news-image

சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில்...

2025-03-23 17:49:19
news-image

சுகாதார துறையின் அபிவிருத்தி: ஐ.நா திட்ட...

2025-03-23 20:40:52
news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22