இலங்கை இனப்படுகொலைக்கு காரணம் தி.மு.க. ஆகும். இந்தப் படுகொலையைச் செய்தவர்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த தூண்டியது அ.தி.மு.க. ஆகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வாக்கு கேட்டு வரும் தி.மு.க.-–காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடியுங்கள். இரு கட்சிகளும் தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் தீமைகளை மட்டுமே செய்துள்ளன.
இலங்கை இனப்படுகொலைக்கு காரணம் தி.மு.க. ஆனால், இந்தப் படுகொலையைச் செய்தவர்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த தூண்டியது அ.தி.மு.க. ஆகும். அதேபோல கச்சதீவு தாரைவார்க்கப்பட உடந்தையாக இருந்தது தி.மு.க. ஆனால், கச்சதீவை மீட்கப் பாடுபடுவது அ.தி.மு.க.
தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும்போது வேடிக்கை பார்த்ததோடு, அவர்கள் பேராசைக்காரர்கள் எனப்பழித்தது. காவிரியின் குறுக்கே அணைகள் கட்ட உறுதுணையாக இருந்தது,முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்துக்கு சாதகமாக நடந்தது அனைத்தும் தி.மு.க.வே. ஆனால், திறமையான வாதங்களால் உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்றதும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசாணையில் வெளியிடச் செய்ததும் அ.தி.மு.க. ஆகும்.
தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச்செய்தீர்கள். 2011-ஆம் ஆண்டு 54 தலைப்புகளில் வாக்குறுதி அளித்து தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. வெளியிட்டது. இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் நாங்கள் நிறைவேற்றவுள்ள வாக்குறுதிகளை இப்போது அளித்துள்ளோம்.
அல்லும் பகலும் தமிழக மக்களின் நலன் கருதியே நான் உழைத்து வருகிறேன். ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி தன் மக்களுக்காகவே உழைப்பவர். நான், தமிழக மக்களுக்காக திட்டங்களைத் தீட்டி செயற்படுத்தி வருகிறேன். ஆனால், கருணாநிதி தன் மக்களுக்காக திட்டங்களைத் தீட்டி செயற்படுத்தினார். அரசின் வருவாயைப் பெருக்க நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
தன் மக்களின் வருவாயைப் பெருக்கவே கருணாநிதி நடவடிக்கை எடுத்தார். தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட நான் குரல் கொடுத்து வருகிறேன். தன் மக்கள் வளமான இலாகாக்களைப் பெற மத்திய அமைச்சரவையில் குரல் கொடுத்தவர் கருணாநிதி.
தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்தது தி.மு.க. இருண்ட தமிழகத்தை ஒளிமயமாக்கியது, இலவசங்கள் வழங்கி குடும்ப நலன் பேணியது. விலையில்லாப் பொருள்கள் வழங்கி மக்கள் நலன் பேணியது அ.தி.மு.க.. மக்களின் நிலங்களை அபகரித்து, திரைப்படத் துறையை கபளீகரம் செய்தது தி.மு.க. நிலங்களையும், திரைப்படத் துறையையும் மீட்டது அ.தி.மு.க.. 2–ஜி, ஏர்செல்-மேக்சிஸ், பி.எஸ்.என்.எல். இணைப்பு என கொள்ளை அடித்தது, எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என ஆட்சி நடத்தியது தி.மு.க. ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவது அ.தி.மு.க. திருக்கோயில்களில் நடைபெறும் அன்னதான திட்டத்தை இரத்து செய்யவும், அம்மா உணவகங்களை மூடவும் தி.மு.க. உத்தேசித்துள்ளது. தி.மு.க. –- காங்கிரஸ் கூட்டணிக்கு அளிக்கப்படும் எந்த ஒரு வாக்கும் உங்கள் நலனுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் வேட்டு என்பதை மறக்கக் கூடாது. எனவே, வாக்கு கேட்டு வரும்போது தி.மு.க. -– காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடியுங்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM