நாட்டெங்கும் அறநெறிப் பாடசாலைகளுக்கான மண்டப வசதிகள் இல்லாத அனைத்து விகாரைகளுக்கும் நவம்பர் மாதத்தில் அறநெறி மண்டபங்களை அமைத்துக் கொடுக்க தான் மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திம்புலாகல, மஹஉலபத, ஸ்ரீ சுதர்சனாராம விகாரையின் அறநெறிப் பாடசாலை கட்டிடத்தை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் .
மக்களின் சரியான தீர்வின் பின்னர், ஐந்து வருடங்களுக்குள் இந்தச் செயற்திட்டம் பூர்த்தி செய்யப்படும். எதிர்காலத்தில் மரங்களுக்கு கீழ் அறநெறிக் கல்வி வழங்கப்பட மாட்டாது. 'சிசு தஹம் செவன' என்ற மாணவர் அறநெறி நிழல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நிரந்தர மண்டபமொன்றில் அறநெறிக் கல்வியை வழங்கும் நடவடிக்கை ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக 4 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் மாதம் நாட்டின் அரசியல் துறையில் பாரிய சமூகப் புரட்சி உருவாகவுள்ளது, அந்த சரியான தீர்மானத்தின் பின்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அறநெறிக் கல்வியைப் பயிலும் மாணவர்களுக்கு பகல் உணவையும், சீருடையையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெறும் எந்தவொரு வரப்பிரசாதமும் தனக்கு அவசியமில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM