லசந்த படுகொலை ; அமெரிக்க வழக்கில் இராஜதந்திர சலுகையை எதிர்பார்க்கும் கோத்தா

Published By: Vishnu

25 Aug, 2019 | 06:06 PM
image

ஜனவரி 2009 லசந்த விக்கிரமதுங்க சித்திரவதை மற்றும் சட்டத்துக்கு புறம்பான கொலை தொடர்பில் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கலிபோனியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளனர். 

இக் குற்றச்சாட்டை மறுப்பதுடன் இக்குற்றச்சாட்டு உண்மையாக இருக்கின்ற பட்சத்திலும் கூட இராஜதந்திரி என்ற ரீதியில் வெளிநாட்டு அலுவலர் சலுகை அடிப்படையில் இவ் வழக்கை அணுக வேண்டும் என கோத்தபாயவின் சட்டத்தரணிகள் நீதி மன்றத்தை கேட்டுள்ளனர். 

இக் குற்றச்சாட்டின் முறைப்பாடு உண்மையாக இருக்கும் என்ற ஊகத்தில் கூட இவ் வழக்கில் சட்டப்பூர்வ ஆதாரப்பற்றாக்குறை இருப்பதாக ராஜபக்ஷவின் சட்டதரணிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர். 

ஜனாதிபதி வேட்பாளர் என்ற ரீதியில் இலங்கையர்கள் இவ் வழக்கை உன்னிப்பாக அவதானித்து வரும் வேளையில் கோத்தபாய ராஜப்கஷ இக் கருத்தை நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார். அதேவேளை இக் குற்றச்சாட்டை கோத்தபாய ராஜபக்ஷ வன்மையாக மறுப்பதாகவும் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்ஷா விக்கிரமதுங்க தொடுத்துள்ள இவ் வழக்கில் இலங்கையின் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ அதிகார மட்டத்திலேயே இதனை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே இவ் வழக்கில் பொது சட்ட வெளிநாட்டு அலுவலர் சலுகையின் கீழ் விசாரித்து இவ் வழக்கை தள்ளுப்படி செய்ய வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாயவின் சட்டத்தரணிகள் அமெரிக்க நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள்...

2024-04-18 13:21:31
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07