மின்னல் தாக்கி இராணுவ சிப்பாய் பலி!

Published By: Vishnu

25 Aug, 2019 | 03:47 PM
image

சீகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இனாமலுவ இராணுவ முகாமில் பணிபுரிந்த இராணுவ சிப்பாய் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

சீகிரியா - இனாமலு இராணுவ முகாமில் தோட்ட வேலையில் ஈடுப்பட்டிருந்த சிப்பாய் ஒருவர் நேற்று மாலை 4 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக சீகிரியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஊவ பரணகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மஹா ஆராச்சிகே அஷங்க உதயகுமார எனப்படும் சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவத்தின் போது குறித்த சிப்பாய் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12
news-image

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத...

2025-02-08 16:04:02
news-image

கொழும்பு - வெல்லவாய வீதியில் விபத்து...

2025-02-08 15:43:57
news-image

இராமகிருஷ்ண மிஷனின் கிளை திங்கள் கொட்டகலையில்...

2025-02-08 14:51:08
news-image

மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை :...

2025-02-08 15:49:12
news-image

குருணாகலில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-08 15:58:20