மன்னார் வங்காலை கடற்கரை பகுதியில் 'கொக்கெய்ன்' என சந்தேகிக்கப்படும் 983 கிராம் எடை கொண்ட போதைப்பொருளை இன்று (24) சனிக்கிழமை அதிகாலை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து இன்று சனிக்கிழமை (24) அதிகாலை வங்காலை கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது வங்காலை கடற்கரை பகுதியில் உள்ள மீன் வாடி ஒன்றிற்கு அருகாமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பொதியை மீட்டுள்ளனர்.
குறித்த பொதியில் 983 கிராம் எடை கொண்ட கொக்கெய்ன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் காணப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட குறித்த போதைப்பொருள் வாங்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வங்காலை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM