மொரிஷியஸ் தீவு மற்றும் தென் ஆபிரிக்கக் கடற்கரைகளில் கண்டெடுக்கப்பட்ட இரு விமான சிதைவுகள் காணாமல்போன மலேசிய எம்.எச். 370 விமானத்தின் சிதைவுகள் என பெரும்பாலும் நிச்சயமாகியுள்ளதாக மலேசிய மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.
மேற்படி விமானமானது 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 239 பேருடன் கோலா லம்பூர் நகரிலிருந்து பீஜிங் நகருக்கு பயணித்த வேளை காணாமல்போனது.
இதனையடுத்து அந்த விமானத்தைக் கண்டுபிடிக்கும் முகமாக தென் இந்து சமுத்திரத்தில் 120,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் 3 கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் தோல்வியைத் தழுவியிருந்தன.
இந்நிலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிதைவுகளில் 5 சிதைவுகள் குறிப்பிட்ட மலேசிய விமானத்தினுடையவையாக இருக்கலாம் என நம்பப்பட்டது.
தொடர்ந்து அந்த சிதைவுகள் அனைத்தும் அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு போக்குவரத்து பாதுகாப்பு பணிமனை மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இதனையடுத்து மொரிஷியஸ் தீவு மற்றும் தென் ஆபிரிக்கக் கடற் கரைகளில் கரையொதுங்கிய இரு சிதைவுகள் மலேசிய எம்.எச். 370 விமானத்தின் சிதைவுகள் என பெரும்பாலும் நிச்சயமாகியுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். அதே சமயம் அவுஸ்திரேலிய போக்குவரத்து பணிமனையும் அவரது அறிவிப்பை ஆமோதித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM