வெளிநாடுகளில்  தொழில்புரியும் இலங்கை பிரஜைகளும் வாக்களிப்பதற்கான  ஏற்பாடுகளை  செய்ய  வலியுறுத்தல்  

Published By: Digital Desk 4

21 Aug, 2019 | 10:02 PM
image

(ஆர்.விதுஷா)

வெளிநாட்டில்  தொழில்  புரியும்  இலங்கைப் பிரஜைகளுக்கும்  எதிர்வரும்  ஜனாதிபதி  தேர்தலில் வாக்களிப்பதற்கான   ஏற்பாடுகளை  செய்யப்பட்ட  வேண்டும் என வலியுறுத்த   கட்சி  பேதமின்றி  அனைவரையும்   ஒன்றிணையமாறு   “அக்கரையில்  நாம் “ என்னும்  அமைப்பு  அழைப்பு  விடுத்துள்ளது.  

மக்கள் விடுதலை  முன்னணியினரால் (ஜே.வி.பி)  ஏற்பாடு  செய்யப்பட்ட  ஊடகசந்திப்பு  இன்று  புதன்கிழமை   சமய  சமூக  நடுநிலையத்தில்  இடம்  பெற்றது.  

இதன்போது கருத்து  தெரிவித்த   பாராளுமன்ற  உறுப்பினர்  சுனில்  ஹந்துனெத்தி கூறியதாவது  ,  

தேசிய  வருவாயில்  பாரியளவிலான  பங்களிப்பை  வழங்குபவர்களாக வெளிநாட்டில் தொழில்  புரிவோர் விளங்குகின்றனர்.  அவர்களினால்   5  பில்லியன்  ரூபாய்க்கும்  அதிகளவிலான  வெளிநாட்டு வருவாய்கிடைக்கப்பெறுகின்றது.  இந்நிலையில்  அவர்களுடைய  உரிமையை  பாதுகாக்க  வேண்டியது எமது கடமையாகும். 

வெளிநாட்டில்  தொழில்  புரியும் நாட்டின்  பிரஜைகளுக்கு   எதிர்வரும்  ஜனாதிபதி  தேர்தலின்  போது வாக்களிப்பதற்கான  உரிமையை  ஏற்படுத்திக்கொடுக்கவேண்டியது  அவசியமானதாகும்.  வெளிநாடுகளில்  தொழில் புரியும்  தமது நாட்டவர்களுக்கு  தேர்தலின்  போது    வாக்களிப்பதற்கான  வாய்ப்பை  115  நாடுகள்    ஏற்படுத்திக்கொடுத்துள்ளன.  

எமது நாட்டிலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான  நடவடிக்கைகள்  2016  இல்  மேற்கொள்ளப்பட்டன.  

எனவே வெளிநாட்டில்  தொழில்  புரிவோருக்கும்  வாக்களிக்கும் உரிமையை  பெற்றுக்கொடுப்பதற்கு  வாய்ப்புக்கள்  அதிகளவில்  காணப்படகின்றன.  ஆகவே  , இதனை நடைமுறைப்படுத்துவதற்கு   ஏதுவான நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கு  அனைத்து  கட்சி பேதமின்றி  அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31