எப்போது ஓய்வு பெறுவது என்பது குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பை டோனிக்கு அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் தலைவர் பொறுப்பில் இருந்து டோனியை மாற்றி விட்டு விராட் கோலியை நியமிக்க இதுவே சரியான தருணம் என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கையிலேயே அசாருதீன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அசாருதீன் மேலும் தெரிவிக்கையில்,
‘அது கங்குலியின் தனிப்பட்ட கருத்தாகும். அதனை நான் மதிக்கிறேன்.
எப்போது ஓய்வு பெறுவது என்பது குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பை டோனிக்கு அளிக்க வேண்டும்.
அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு டோனி தகுதியானவர். டோனி சிறந்த தலைவராக விளங்கி வருகிறார்.
அவரது தலைமையில் இந்திய அணி உலகக் கிண்ணப்போட்டிகளில் வென்று இருப்பதுடன், இந்தியா முதலாவது இடத்தையும் பிடித்தது.
எனவே, அவரது செயல்பாடுகளை நாம் மறந்து விடக்கூடாது என அவர் பதிலளித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM