கடந்த காலங்களில் அரசுடன் இணைந்து எமது பிள்ளைகளை கடத்திய டக்ளஸ் மற்றும் வரதராஜப் பெருமாள் தரப்புகள் மீண்டும் கோத்தாவுடன் இணைந்து தமிழர்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர் என்று முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
உள்நாட்டு போரில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவே என்று எமது மக்களுக்கும் உலகுக்கும் தெரியும். எங்களின் உறவுகளை மறைத்து வைத்திருக்க பிரதான சூத்திரதாரி இவர்தான்.
தமிழ் மக்களை பொறுத்தவரையில் கோத்தபாய போர்க்குற்றவாளி தான். அந்த மனநிலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர தமிழ் மக்களாகிய நாம் இடமளிக்க மாட்டோம். அவர் எம்மை மீறி ஜனாதிபதியாக வந்தாலும் மிகுதியாக இருக்கின்ற எங்களை கொன்றழிக்கவே துடிப்பார்.
காணாமல்போன உறவுகளுடன் முக்கியமாக அரசியல் கைதிகளை தங்களின் கட்டுப்பாட்டிலேயே இவர்கள் வைத்திருந்தனர். ஆனால் அவர்களில் பலர் எங்கே? சிறைகளில் தடுத்து வைத்தவர்களை விடுவிக்கவில்லை. சிறையில் உள்ளவர்களையாவது நாம் மீட்க வேண்டும் என பல போராட்டங்களை நடத்தினோம்.
ஆனால் இவர்களும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் கொஞ்சம் கூட இரங்கவில்லை.
கடந்த காலங்களில் அரசுடன் இணைந்து எமது பிள்ளைகளை கடத்திய டக்ளஸ், வரதராஜப்பெருமாள் தரப்புகள் மீண்டும் கோத்தபாயவுடன் இணைந்து தமிழர்களை மேலும் நசுக்ககங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன.
அவர்களின் குணத்தை மாற்ற முடியாது. ஆனால் தேர்தலில் எமது தமிழ் தலைமை தவறுவிட்டால் நாம் தட் டிக் கேட்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM