காணி உரித்து இல்லாதவர்களுக்கு உரித்துரிமை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்கட்சி தடுத்துள்ளது ; லக்ஷ்மன் கிரியெல்ல 

Published By: R. Kalaichelvan

20 Aug, 2019 | 05:22 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

காணி உரித்து இல்லாதவர்களுக்கு உரித்துரிமை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்க்கட்சி நீதிமன்றம் சென்று தடுத்துள்ளது.

அதனால் அரச காணி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்கின்றது. இதன் மூலம் 25லட்சம் பேருக்கு காணி உரித்துரிமை வழங்கும் திட்டம் தடைப்பட்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவால் விடுக்கும்வகையில் கருத்து தெரிவித்தனர். 

பாராளுமன்றம் இன்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில்,

அரசகாணி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ்பெற்றுக்கொள்கின்றது. எதிர்க்கட்சியினர் நீதிமன்றம் சென்று அதனை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் அதில் சட்டப்பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. 

காணி உரித்து இல்லாத 25லட்சம்பேருக்கு காணி உரித்துரிமை வழங்குவதற்கே நாங்கள் நடவடிக்கை எடுத்திருந்தோம். நாட்டில் பலருக்கு காணி உரித்துரிமை இல்லாததால் அவர்களுக்கு வங்கி கடன் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

 அதனால் தான் நாங்கள் அரசகாணி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து காணி உரித்துரிமை இல்லாதவர்களுக்கு உரித்துரிமை வழங்க நடவடிகை எடுத்தோம். அதன் மூலம் அவர்களுக்கு அந்த காணியை விற்கமுடியும். விரிவாக்க முடியும். என்றாலும் எதிர்க்கட்சி நீதிமன்றம் சென்று அதனை தடுத்திருக்கின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20