(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
காணி உரித்து இல்லாதவர்களுக்கு உரித்துரிமை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்க்கட்சி நீதிமன்றம் சென்று தடுத்துள்ளது.
அதனால் அரச காணி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்கின்றது. இதன் மூலம் 25லட்சம் பேருக்கு காணி உரித்துரிமை வழங்கும் திட்டம் தடைப்பட்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவால் விடுக்கும்வகையில் கருத்து தெரிவித்தனர்.
பாராளுமன்றம் இன்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில்,
அரசகாணி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ்பெற்றுக்கொள்கின்றது. எதிர்க்கட்சியினர் நீதிமன்றம் சென்று அதனை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் அதில் சட்டப்பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன.
காணி உரித்து இல்லாத 25லட்சம்பேருக்கு காணி உரித்துரிமை வழங்குவதற்கே நாங்கள் நடவடிக்கை எடுத்திருந்தோம். நாட்டில் பலருக்கு காணி உரித்துரிமை இல்லாததால் அவர்களுக்கு வங்கி கடன் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அதனால் தான் நாங்கள் அரசகாணி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து காணி உரித்துரிமை இல்லாதவர்களுக்கு உரித்துரிமை வழங்க நடவடிகை எடுத்தோம். அதன் மூலம் அவர்களுக்கு அந்த காணியை விற்கமுடியும். விரிவாக்க முடியும். என்றாலும் எதிர்க்கட்சி நீதிமன்றம் சென்று அதனை தடுத்திருக்கின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM