யாழ். தீவகம் புங்குடுதீவு பகுதியில் 16 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர் என்றும் ஊர்காவற்றுறைப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்தவர். மற்றவர் வவுனியா செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று காலை கஞ்சா போதைப்பொருளை கடத்திச் செல்ல முற்பட்டபோது புங்குடுதீவு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வைத்து கடற்படையின் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
சந்தேகநபர்களின் உடைமையில் இருந்து 16 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கஞ்சாவின் பெறுமதி 40 இலட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஊர்காவற்றுறைப் பொலிஸார், சந்தேகநபர்களை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM