மலையகப் பெருந்தோட்ட பாதைகள் யாருக்கும் சொந்தமில்லை. அவை தோட் டப் பாதைகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் அரசாங்கத்தின் எந்த முகவர் அமைப்பும் அவற்றை பொறுப்பேற்று புனரமைப்பதோ பராமரிப்பதோ இல்லை. எனவே மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைக்கு கீழாக தோட்டப் பாதைகளை பிரகடனப்படுத்துமாறு கோரி பாராளுமன்றில் பிரேரணை முன்வைத்தேன்.
அதனை உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் ஆரம்பமாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட யுலிபீல்ட் - அந்தோனிமலை பாதை கார்ப்பட் இடுவதற்கான ஆரம்பப் பணிகள் அண்மையில் அந்தோனிமலையில் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்க உபதலைவர்கள் ராஜமாணிக்கம், சிவானந்தன், கொட்டகலை பிரதேச அமைப்பாளர் செந்தூரன், செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக நாம் பெருந்தோட்டப் பகுதி பாதைகள் பலவற்றை புனரமைத்து வருகிறோம். அண்மையில் அமைச்சர் கபீர் ஹாசிமை அழைத்து வந்து கார்பட் பாதைகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளை நடத்தியிருந்தோம். இப்போது ரண்மாவத் திட்டத்துக்கு மேலாக பெருந்தோட்டப் பாதைகளுக்கு என விசேட திட்டம் ஒன்றை வழங்கவும் அமைச்சர் கபீர் எமக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தற்போதைய ரண்மாவத் திட்டத்தின் கீழ் சந்திரிகாமம், ராணிவத்தை, பிட்டவின், சென்கூம்ஸ், டில்லிகுல்ற்றி, ரொஸ்கிரியா ஆகிய பாதைகளுடன் அந்தோனிமலை பாதையிலும் எனது கோரிக்கையின் பேரில் கார்ப்பட் பணிகளை ஆரம்பித்துள்ளார்கள். அதேபோல எமது தலைவர் அமைச்சர் திகாம்பரம் தலைமையில் மேபீல்ட் பாதை பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எபோட்ஸ்லி பாதை விரைவில் ஆரம்பிக்கப்படும். இதனை அறிந்தே அங்கு போராட்டம் ஏற்பாடு செய்யப்படுவதாக அறிகிறேன். பாதை கேட்டுநின்ற மலையக மக்கள் இப்போது கார்ப்பட் பாதை கேட்டு போராடும் காலம் மலர்ந்துள்ளது. இது அரசியல் மாற்றத்தின் அடையாளமாகும்.
இங்கே அந்தோனிமலைக்கு வழங்கப்படும் பாதையை தமக்கு வழங்குமாறு வழியில் நின்று என்னிடம் கேட்டனர். இந்தப் பாதை யூலிபீல்ட் சந்தியில் தொடங்கி அந்தோனிமலையில் நிறைவடைகின்றது.
அந்தோனிமலை மக்கள் இந்த வீதியினை புனரமைக்க கோரி பாரிய போராட்டம் ஒன்றினை நடாத்தினர். அப்போதுதான் புதிய பிரதேச சபை உறுப்பினராக தெரிவான எமது கட்சியின் நாகேந்திரன் என்ன செய்வது என என்னிடம் கேட்டார். உடனே தளத்திற்கு சென்று எமது பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் இதனை புனரமைத்து தருவதாக உறுதியளித்துள்ளார் என மக்களிடம் சொல்லுங்கள் என்றேன். அது இப்போது நிறைவேறுகின்றது.
வெலிங்டன், யுலிபீல்ட் என கிறிஸ்லஸ் பாம் என இந்த பாதை அறுபதடி பால சந்தியை சென்றடையும். இத்தகைய பாதை அபிவிருத்திகளை ஒரு சவாலாகவே எதிர்கொள்கிறோம். அதேபோன்று புரட்டப், சந்திரிகாமம் போன்ற பாதைகளுக்கு கடந்த ஆண்டே கார்ப்பட் இட திட்டமிடப்பட்ட போதும் அந்த திட்டங்களும் கைவிடப்பட்டன. மீண்டும் மீட்டு வந்து விரைவில் புனரமைப்பு செய்வுள்ளோம். நான் வாக்குறுதியளித்த அந்த பாதைகளை புனரமைக்காவிட்டால் அந்த மக்களிடம் நான் வாக்கு கேட்டுப்போகமாட்டேன் என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM