ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் ; காணாமலாக்கப்பட்டோரின்  உறவுகள்

Published By: Digital Desk 4

18 Aug, 2019 | 03:06 PM
image

காணாமல்போனோர் விடயத்திற்கு இன்றுவரை தீர்வு கிட்டாத நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல்போன உறவின் தாயார் கந்தசாமி தவமலர்  தெரிவித்தார்.

Image result for காணாமலாக்கப்பட்டோரின்  உறவுகள்

நிலைமாறுகால நீதிக்காய் எங்களின் குரல்கள்'என்னும்  விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் வடக்கு கிழக்கு மாவட்டப் பெண்கள் சமாசங்கள் இணைந்து பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிரச்சினைகளினைப் பகிர்தல் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை  திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள  லட்சுமி திருமண மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதன்போது  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இங்கே இது தொடர்பில் குறித்த பெண்மணி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனையானது மிகப் பெரியது.  நான் கணவரை இழந்து இரு பிள்ளைகளை இழந்து தனிமையில் வாடுகின்றேன். 3 பேர் காணாமல் போன நிலையில் நான் தனிமையில்  உள்ளேன். எனது உறவுகளையும் அதேபோன்ற உறவுகளையும் தேடும் ஆயிரக் கணக்கானோரில் நானும் ஒருவர்.

காணாமல்போனோர் சான்றிதழ் தருவதானால் முதலில்  காணாமல் ஆக்கப்பட்டவர் எனப் பதிய வேண்டும். எமக்கு எங்கள் உறவுகள் வேண்டும். எமது வேதனையை யாரிடம் கூருவது என்றுகூட  தெரியாமல் இன்று நிலமை உள்ளது. அடுத்து ஓ.எம்.பி நிறுவனம்  வேண்டும். அரசு எம்மை ஏமாற்றியவாறே உள்ளது.

ஓ.எம்.பி வேண்டும் உடனடியாக அந்த அலுவலகம் இங்கே உடனடியாக அமைக்கப்பட வேண்டும். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:22:17
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52