அங்கோலாவில் பரவிவரும் மஞ்சள் காய்ச்சலானது உலகளாவிய சுகாதார அவசரகால நிலைமையைத் தோற்றுவிப்பதாக உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்தது.
நுளம்புகளால் பரவும் மேற்படி காய்ச்சல் காரணமாக அங்கோலாவில் கடந்த வரு டம் டிசம்பர் மாதம் முதல் 277 பேர் பலியாகியுள்ளதாக அந்த ஸ்தாபனம் கூறுகிறது.
இந்நிலையில் இந்தக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் தொடர்பில் நிலவும் பற்றாக்குறையானது அந்தக் காய்ச்சல் ஏனைய நாடுகளுக்கும் பரவும் அபாய நிலையைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படு கிறது.
இதுவரை அங்கோலாவின் 24.3 மில்லியன் சனத்தொகையில் சுமார் 6 மில்லியன் பேருக்கு இந்தத் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வைரஸானது கொங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா மற்றும் சீனாவுக்கும் பரவியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM