பாராளுமன்ற ஆசனத்தை பிலிப்பைன்ஸ் தேர்தலில் முதல் தடவையாக பால்மாற்ற சிகிச்சை செய்துகொண்ட அரசியல்வாதியொருவர் பாராளுமன்ற ஆசனத்தை வென்றுள்ளார்.
ஜெரால்டின் ரோமன் (49 வயது) என்ற மேற்படி அரசியல்வாதி பால்மாற்ற சிகிச்சை செய்து கொள்பவர்கள் தொடர்பில் அந்நாட்டில் நிலவி வரும் மத ரீதியான வெறுப்புணர்வு மற் றும் பாரபட்ச நிலை என்பவற்றையும் மீறி வெற்றிபெற்றுள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் வடமேற்கு மணிலாவிலுள்ள பதான் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற ஆசனமொன்றை வென்றெடுத்துள்ளார்.
பால் மாற்ற சிகிச்சை செய்துகொண்ட ஜெரால்டின் தன்னினசேர்க்கையாளராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருச்சபையின் செல்வாக்கு மிக்க பிலிப்பைன்ஸில் விவாகரத்து, கருக்கலைப்பு, தன்னினசேர்க்கைத் திருமணங்கள் போன்றவற்றுக்கு தடை நிலவுகிறது. இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம் தான் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் ஒருவராகவும் மதிக்கப்படுபவராக வும் உள்ளதாக உணர்வதாகவும் தெரிவித்த ஜெரால்டின், தான் அரசியலில் பணியாற்ற ஆர்வமான உள்ளதாகவும் ஆனால் பெருமளவு மக்கள் பால்மாற்ற சிகிச்சைக்கு எதிரான எண் ணப் போக்கைக் கொண்டிருப் பதால் தனது பணி கடினமா னதாக இருக்கும் என்பதை உணர்வதாகவும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM