மரு­த­மடு அன்­னையின் பெரு­விழா இன்று

Published By: Vishnu

15 Aug, 2019 | 10:27 AM
image

மரு­த­மடு அன்­னையின் பெரு­விழா இன்று வியா­ழக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. 

கடந்த ஆறாம் திகதி கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மான இவ் விழா ஒன்­பது தினங்கள் நவ­நாட்கள் நடை­பெற்­ற­துடன் நேற்றுப் புதன்­கி­ழமை மாலை நற்­க­ருணை விழாவும் இதைத் தொடர்ந்து நற்­க­ருணை பவ­னியும் ஆல­யத்தில் நடை­பெற்­றன.

நாட்டின் நாலா பக்­கங்­க­ளி­லி­ருந்தும் இலட்­சக்­க­ணக்­கான பக்­தர்கள் இவ் விழாவில் கலந்து கொள்­வ­தற்­காக வந்­தி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

என்றும் இல்­லா­த­வாறு இம்­முறை பலத்த பாது­காப்­புடன் ஆலய வளா­கத்­துக்குள் நுழைவோர் பரி­சோ­த­னைக்கு உட்­படுத்தப்பட்டு வரு­வ­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­ றது.

மடு பரிபா­லகர் அருட்­பணி பெப்பி சோசை அடி­க­ளாரின் மேற்­பார்­வையில் மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இம்­மா­னுவேல் பெர்­னாண்டோ ஆண்­ட­கையின் தலை­மையில்  நடை­பெற இருக்கும் இப் பெரு­வி­ழாவில் திருப்­ப­லி­யா­னது பதுளை மறை ­மா­வட்ட ஆயர் மேதகு வின்சன்ட் பெர்­னாண்டோ ஆண்­டகை தலை­மையில் நடை­பெற இருப்­ப­துடன் மன்னார் மறை­மா­வட்ட ஆயர் மேதகு இம்­மா­னுவேல் பெர்­னாண்டோ ஆண்­டகை, அனு­ரா­த­புரம் மறை­மா­வட்ட ஆயர் மேதகு நோபட் அன்­றாடி ஆண்­டகை, குரு­நாகல் மறை­மா­வட்ட ஆண்­டகை மேதகு ஹரல்ட் பெரேரா ஆகியோர் இணைந்து திரு­ விழா திருப்­பலியை ஒப்­புக்­கொ­டுப்பர்.

இன்று நடை­பெற இருக்கும் காலை பெரு­விழாத் திருப்­ப­லிகள் அதிகாலை 5 மணிக்கு மடு பரி­பா­லகர் அருட்­பணி பெப்பி சோசை அடி­க­ளாரின் தலைமையில் தமிழ், சிங்கள மொழிகளிலும், இதைத் தொடர்ந்து காலை 6.15 மணிக்கு நான்கு மறைமாவட்ட ஆயர்களின் கூட்டுத் திருப் பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - புளியங்குளம் வரையான 14...

2025-11-10 16:24:34
news-image

2026 வரவு - செலவுத் திட்டம்...

2025-11-10 15:25:24
news-image

விவசாயிகள் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம்...

2025-11-10 15:23:51
news-image

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவை முக்கிய...

2025-11-10 17:43:31
news-image

ஐ.தே.க.வை கட்டியெழுப்ப 6 மாத கால...

2025-11-10 15:12:05
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகளுக்காக...

2025-11-10 16:53:48
news-image

இலங்கை - சவூதி இடையிலான இருதரப்பு...

2025-11-10 16:37:24
news-image

முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

2025-11-10 18:47:36
news-image

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

2025-11-10 18:52:51
news-image

அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக ஆசிரியர்கள் டிசம்பரில்...

2025-11-10 18:22:43
news-image

கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி...

2025-11-10 18:12:42
news-image

ஐ.தே.கவின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதி பொதுச்...

2025-11-10 18:01:43