(எம்.மனோசித்ரா)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் என்பதோடு கடும் மழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவு தொடர்பாக பல பிரதேசங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை இன்று காலை 11 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாகப் பெய்யும் அடை மழை காரணமாக களுகங்கை மற்றும் கிங் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இவ்வாறு களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தமையால் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தது.
அத்தோடு நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடரக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொ த்துவில் தொடக்கம் அம்பாந்தோட்டை வழியாக திருகோணமலை வரையான கடற்பரப்புக்களில் காற்றின் வேகம் 70 -- 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிப்பு
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் மண் சரிவின் காரணமாக நுவரெலியா மாவட்டமும், வெள்ளப்பெருக்கின் காரணமாக இரத்தினபுரி மாவட்டமும் அதிக பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, அங்குராங்கெத்த, அம்பகமுவ மற்றும் கொத்மலை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளைச் சேர்ந்த 157 குடும்பங்களைச் சேர்ந்த 644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 441 குடும்பங்களைச் சேர்ந்த 1696 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் கன மழையால் 177 குடும்பங்களைச் சேர்ந்த 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறையில் கடந்த ஒரு வார காலத்திற்குள் கடும் காற்று, பாறை சரிந்து வீழ்ந்தமை, மரம் முறிந்து வீழ்ந்தமை என்பவற்றார் 320 குடும்பங்களைச் சேர்ந்த 1176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டையில் கடும் காற்றினால் 67 குடும்பங்களைச் சேர்ந்த 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று காலி மாவட்டத்தில் 335 குடும்பங்களைச் சேர்ந்த 1195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறையில் 137 குடும்பங்களைச் சேர்ந்த 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM