சிவப்பு எச்­ச­ரிக்கை தொடர்கிறது

Published By: Vishnu

15 Aug, 2019 | 08:41 AM
image

(எம்.மனோ­சித்ரா)

நாட்டில் நிலவும் சீரற்ற கால­நிலை தொடரும் என்­ப­தோடு கடும் மழை, பலத்த காற்று மற்றும் மண்­ச­ரிவு தொடர்­பாக பல பிர­தே­சங்­க­ளுக்கு செவ்­வாய்க்­கி­ழமை விடுக்­கப்­பட்ட சிவப்பு எச்­ச­ரிக்கை இன்று காலை 11 மணி­வரை   நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. 

கடந்த சில தினங்­க­ளாகப் பெய்யும் அடை மழை கார­ண­மாக களு­கங்கை  மற்றும் கிங் கங்கை ஆகி­ய­வற்றின் நீர்­மட்டம் அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாறு களு கங்­கையின் நீர்­மட்டம் அதி­க­ரித்­த­மையால் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் சில பிர­தே­சங்­களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. 

அத்­தோடு நாட்டின் பல பகு­தி­களில் பலத்த காற்­றுடன் கூடிய மழை தொடரக் கூடும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது. மேல், மத்­திய, சப்­ர­க­முவ, வட மேல் மற்றும் தென் மாகா­ணங்­களில் பலத்த மழை பெய்யும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மத்­திய, சப்­ர­க­முவ மாகா­ணங்­க­ளிலும் காலி, மாத்­தறை, களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் 100 மில்­லி­மீற்றர் வரை மழை பெய்­யக்­கூ­டிய சாத்­தியம் காணப்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இதே­வேளை, பொ த்­துவில் தொடக்கம் அம்­பாந்­தோட்டை வழி­யாக திரு­கோ­ண­மலை வரை­யான கடற்­ப­ரப்­புக்­களில் காற்றின் வேகம் 70 -- 80 கிலோ­மீற்றர் வரை அதி­க­ரிக்கும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இதனால் மீன­வர்கள் கட­லுக்குச் செல்­வதைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். 

பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்­க­ளாக நிலவும் சீரற்ற கால­நி­லை­யினால் மண் சரிவின் கார­ண­மாக நுவ­ரெ­லியா மாவட்­டமும், வெள்­ளப்­பெ­ருக்கின் கார­ண­மாக இரத்­தி­ன­புரி மாவட்­டமும் அதிக பாதிப்­புக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. 

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் நுவ­ரெ­லியா, அங்­கு­ராங்­கெத்த, அம்­ப­க­முவ மற்றும் கொத்­மலை ஆகிய பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வு­களைச் சேர்ந்த 157 குடும்­பங்­களைச் சேர்ந்த 644 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 441 குடும்­பங்­களைச் சேர்ந்த 1696 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

கேகாலை மாவட்­டத்தில் பலத்த காற்று மற்றும் கன மழையால் 177 குடும்­பங்­களைச் சேர்ந்த 739 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். களுத்­து­றையில் கடந்த ஒரு வார காலத்­திற்குள் கடும் காற்று, பாறை சரிந்து வீழ்ந்­தமை, மரம் முறிந்து வீழ்ந்­தமை என்­ப­வற்றார் 320 குடும்­பங்­களைச் சேர்ந்த 1176 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

அம்­பாந்­தோட்­டையில் கடும் காற்றினால் 67 குடும்பங்களைச் சேர்ந்த 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று காலி மாவட்டத்தில் 335 குடும்பங்களைச் சேர்ந்த 1195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மாத்தறையில் 137 குடும்பங்களைச் சேர்ந்த 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08