இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவையொட்டி பூட்டான் மன்னர் ஆயிரம் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவர் சுஷ்மா சுவராஜ். இவர் ஹரியான மாநிலத்தில் 1953ஆம் ஆண்டு பிறந்தார்.
7 முறை மக்களவை முதல்வராக செயல் பட்டுள்ள சுஷ்மா சுவராஜ், டெல்லி மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.
2014 முதல் 2019 வரையிலான பா.ஜ.க ஆட்சியின் போது வெளியுறவுத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு நாட்டு மக்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்றார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்ற சுஷ்மா பல நாட்டினரின் மரியாதையையும் மதிப்பையும் அவர் பெற்றுள்ளார். மாரடைப்பு காரணமாக சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்ததால் பல நாட்டினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்டை நாடான பூட்டான் நாட்டில் அவர் மறைவு கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. டெல்லியில் நடந்த சுஷ்மா சுவராஜின் இறுதிச் சடங்கில் பூட்டன் பிரதமர் டிஷெரிங் தோபா கலந்துக் கொண்டார். அத்துடன் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்க்சக் தனது இரங்கல் செய்தியை சுஷ்மா ஸ்வராஜின் குடும்பத்துக்கு அளித்துள்ளார்.
மறைந்த சுஷ்மா சுவராஜ் நினைவையொட்டி பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்க்சக் விசேஷ பூஜைகள் நடத்தி உள்ளார். அத்துடன் ஆயிரம் நெய் விளக்கு ஏற்றி மன்னர் பிரார்த்தனை செய்துள்ளார். நாடெங்கும் அவருக்காகச் சிறப்பு பூஜைகள் நடந்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM