(எம்.எம்.சில்வெஸ்டர்)
கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் தமது பயிற்சிகளுக்காக கிளிநொச்சி விளையாட்டரங்கு மற்றும் நீச்சல் தடாகம் ஆகியவற்றை இலவசமாக பயன்படுத்த முடியும் என விளையாட்டத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முத்துகல ‘வீரகேசரி இணையத்தளத்துக்கு’‘ தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“விளையாட்டுத்துறை அமைச்சின் ஒதுக்கப்பட்ட நிதியின் 350 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட கிளிநொச்சி விளையட்டரங்கு மற்றும் நீச்சல் தடாகம் ஆகியன அண்மையில் வலைப்பந்தாட்ட வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட மாணவ, மாணவிகளின் விளையாட்டு ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கில் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளோம். அவர்கள் தத்தமது பயிற்றுநர்களுடன் விளையாட்டரங்கிலும், நீச்சல் தடாகத்திலும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையிலான 12 மணித்தியால காலப்பகுதியில் அங்கு பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்” என்றார்.
இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியிலிருந்து வட மாகாணத்தின் மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் விளையாட்டரங்கு நிர்மானிப்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதுடன், நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் விளையாட்டரங்குகள் மற்றும் நீச்சல் தடாகங்களை நிர்மானிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM