போலந்திலுள்ள கிராமமொன்றில் கடந்த சுமார் 10 வருட காலப் பகுதியில் ஒரு ஆண் குழந்தையும் பிறக்காததையடுத்து தமது சமூகம் ஆண் வாரிசு இல்லாத ஒன்றாக மாறிவிடுமோ என பிராந்திய அதிகாரிகள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்தப் பிராந்தியத்தின் மேயரான ரஜ்முன் பிறிஸ்ச்கோ, அடுத்து ஆண் குழந்தையை பிரசவிக்கும் தம்பதிக்கு அதிசயிக்கத்தக்க பரிசை வழங்குவதாக அறிவித்துள்ளார். அவர் இரு பெண் பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
92 வீடுகளில் சுமார் 300 பேர் வசிக்கும் அந்தக் கிராமத்தில் 2010 ஆம் ஆண்டிலிருந்து எவருக்கும் ஆண் குழந்தை எதுவும் பிறக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பில் ரஜ்முன் கூறுகையில், "எமது கிராமத்தில் ஏன் ஆண் குழந்தை எதுவும் பிறக்காது உள்ளது என்பது தனக்குப் புரியவில்லை என்று தெரிவித்தார்.
மேற்படி மியஸ்சை ஒட்ர்ஸான்ஸ்கி கிராமத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண் குழந்தையை எவர் பிரசவிக்கிறாரோ அந்தக் குழந்தையின் பெயர் வீதியொன்றுக்கும் கருவாலி மரமொன்றுக்கும் சூட்டப்படவுள்து. அந்தக் கிராமத்தில் இறுதியாக ஆண் குழந்தை பிறந்த 2010 ஆம் ஆண்டில் அங்கு 12 பெண் குழந்தைகள் பிறந்திருந்தன.
நான் எனக்கென ஒரு மகனைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன. ஆனால் அது நிஜத்தில் நிறைவேறவில்லை. எனது அயலவரும் ஆண் குழந்தையை விரும்பினார். ஆனால் அவருக்கு இரு பெண் குழந்தைகளே பிறந்துள்ளன. இங்கு பெண்கள் ஆண் குழந்தைகளைப் பிரசவிப்பார்கள் என நான் நினைக்கவில்லை" என அந்தப் பிராந்தியத்தின் தீயணைப்புப் படையின் தலைவர் தொமாஸஸ் கொலாஸஸ் தெரிவித்தார். உள்ளூர் பெண்ணைத் திருமணம் செய்த தனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளதாக அவர் கூறினார்.
அந்தப் பிராந்திய தீயணைப்புப் படையில் அதிகளவில் பெண்களே கடமையாற்றுகின்றனர். ஆண் குழந்தைகள் இல்லாததால் எதிர்காலத்தில் தமது பாரம்பரிய விவசாயத் தொழிலை மேற்கொள்ள முடியாது போய் விடுமோ என அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பிராந்தியத்தில் ஆண் குழந்தைகள் பிறக்காததற்கான காரணத்தைக் கண்டறிய விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடத்தி வருவதாக மேயர் பிறிஸ்ச்கோ கூறினார்.
போலந்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் அந்நாட்டில் பெண் குழந்தைகளை விடவும் அதிகளவில் ஆண் குழந்தைகளே பிறந்து வருகின்றனர். 2017 ஆம் ஆண்டு தரவுகளின் பிரகாரம் அந்த வருடத்தில் 207,000 ஆண் குழந்தைகளும் 196,000 பெண் குழந்தை களும் பிறந்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM