பத்து வருட காலமாக ஆண் குழந்தைகள் பிறக்காத கிராமம்

Published By: R. Kalaichelvan

13 Aug, 2019 | 11:05 AM
image

போலந்­தி­லுள்ள கிரா­ம­மொன்றில்  கடந்த சுமார் 10 வருட காலப் பகு­தியில் ஒரு ஆண் குழந்­தையும் பிறக்­கா­த­தை­ய­டுத்து தமது சமூகம் ஆண் வாரிசு இல்­லாத ஒன்­றாக மாறி­வி­டுமோ என  பிராந்­திய அதி­கா­ரிகள்  கவ­லை­ய­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் அந்தப் பிராந்­தி­யத்தின் மேய­ரான ரஜ்முன் பிறிஸ்ச்கோ, அடுத்து ஆண் குழந்­தையை பிர­ச­விக்கும் தம்­ப­திக்கு அதி­ச­யிக்­கத்­தக்க பரிசை வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்ளார். அவர் இரு பெண் பிள்­ளை­களின் தந்தை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

92 வீடு­களில் சுமார் 300 பேர் வசிக்கும் அந்தக் கிரா­மத்தில் 2010 ஆம் ஆண்­டி­லி­ருந்து எவ­ருக்கும் ஆண் குழந்தை எதுவும் பிறக்­க­வில்லை. இந்­நி­லையில் இது தொடர்பில் ரஜ்முன் கூறு­கையில், "எமது கிரா­மத்தில் ஏன் ஆண் குழந்தை எதுவும் பிறக்­காது உள்­ளது என்­பது  தனக்குப் புரி­ய­வில்லை என்று தெரி­வித்தார்.  

மேற்­படி மியஸ்சை ஒட்ர்­ஸான்ஸ்கி  கிரா­மத்தில் நீண்ட கால­மாக எதிர்­பார்த்துக்  காத்­தி­ருக்கும் ஆண் குழந்­தையை எவர்  பிர­ச­விக்­கி­றாரோ அந்தக் குழந்­தையின் பெயர் வீதி­யொன்­றுக்கும்  கரு­வாலி மர­மொன்­றுக்கும் சூட்­டப்­ப­ட­வுள்து.­  அந்தக் கிரா­மத்தில் இறு­தி­யாக ஆண் குழந்தை பிறந்த 2010 ஆம் ஆண்டில்  அங்கு 12  பெண் குழந்­தைகள் பிறந்­தி­ருந்­தன.

நான்  எனக்­கென ஒரு  மகனைப் பெற்றுக்கொள்ள  விரும்­பு­கி­றேன. ஆனால் அது நிஜத்தில் நிறை­வே­ற­வில்லை. எனது அய­ல­வரும் ஆண் குழந்­தையை விரும்­பினார். ஆனால் அவ­ருக்கு இரு பெண் குழந்­தை­களே பிறந்­துள்­ளன. இங்கு பெண்கள் ஆண் குழந்­தை­களைப் பிர­ச­விப்­பார்கள் என நான் நினைக்­க­வில்லை" என அந்தப் பிராந்­தி­யத்தின் தீய­ணைப்புப் படையின் தலைவர் தொமாஸஸ் கொலாஸஸ் தெரி­வித்தார். உள்ளூர் பெண்ணைத் திரு­மணம் செய்த தனக்கு இரு பெண் குழந்­தைகள்  உள்­ள­தாக அவர் கூறினார்.

அந்தப் பிராந்­திய தீய­ணைப்புப் படையில் அதி­க­ளவில் பெண்­களே கட­மை­யாற்­று­கின்­றனர். ஆண் குழந்­தைகள் இல்­லா­ததால் எதிர்­கா­லத்தில் தமது பாரம்­ப­ரிய விவ­சாயத் தொழிலை மேற்­கொள்ள முடி­யாது போய் விடுமோ என அந்தக் கிரா­மத்தைச் சேர்ந்த மக்கள் கவ­லை­ய­டைந்­துள்­ள­தாக தெரிவிக்­கப்ப­டு­கி­றது. இந்­நி­லையில் அந்தப் பிராந்­தி­யத்தில் ஆண் குழந்­தைகள் பிறக்­கா­த­தற்­கான கார­ணத்தைக் கண்­ட­றிய விஞ்­ஞா­னிகள் ஆய்­வு­களை நடத்தி வரு­வ­தாக மேயர்   பிறிஸ்ச்கோ கூறினார்.

போலந்தின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் அந்­நாட்டில்  பெண் குழந்தைகளை விடவும் அதிகளவில் ஆண் குழந்தைகளே பிறந்து வருகின்றனர். 2017 ஆம் ஆண்டு தரவுகளின் பிரகாரம் அந்த வருடத்தில் 207,000 ஆண் குழந்தைகளும் 196,000  பெண் குழந்தை களும் பிறந்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17