இல­வசமாக விசா வழங்கும் 48 நாடு­களில் ஒரு முஸ்லிம் நாடு ­கூட இல்லை

Published By: Digital Desk 4

12 Aug, 2019 | 10:48 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சுற்­றுலா அமைச்­சினால் 48 நாடு­க­ளுக்கு இல­வச விசா வழங்­கு­வ­தற்­காக சமர்ப்­பிக்­கப்­ப­ட்டுள்ள அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தில் ஒரு முஸ்லிம் நாடு­கூட இல்லை. இது அரபு நாடு­களை வெறுப்­பூட்டும் நட­வ­டிக்­கை­யாகும். 

ஆனால் எமது நாட்­டுக்கு அரபு நாடு­களே அனை த்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் உதவி வந்­தி­ருக்­கின்­றன. அதனால் அர­சாங்கம் இந்த பிழையை திருத்­திக்­கொள்­ள­வேண்டும் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

சுற்­றுலா அமைச்­சினால் 48 நாடு­க­ளுக்கு 6மாதங்­க­ளுக்கு இல­வச விசா வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ர­வையின் அனு­ம­தியை பெற்­றுக்­கொள்ள சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தில் முஸ் லிம் நாடுகள் உள்­வா­ங்­கப்­ப­டாமல் இருப்­பது தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது­தொ­டர்­பாக அவர் தொட ர்ந்து தெரி­விக்­கையில்,

ஏப்ரல் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பின்னர் இலங்­கைக்கு சுற்­றுலா பய­ணி­களின் வருகை குறை­வ­டைந்­துள்­ளது. அதனால் அவர்­களின் வரு­கையை அதி­க­ரிக்கும் நோக்கில் 48 நாடு­க­ளுக்கு 6 மாதங்­க­ளுக்கு இலங்­கைக்கு வர இல­வச விசா வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக அமைச்­ச­ர­வையின் அனு­ம­தியை பெற்­றுக்­கொள்ள சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் அமைச்­ச­ரவை பத்­தி­ர­த்தில் அரபு நாடுகள் ஒன்றின் கூட பெயர் இல்லை.

அத்­துடன் சுற்­று­லாத்­துறை அமை ச்­சினால் பெய­ரி­டப்­பட்டிருக்கும் 48 நாடு­களும் எமது நாட்டை சூறை­யாட திட்­ட­மிட்­ட­வை­க ளும் அம்­பாந்­தோட்டை மற்றும் திரு­கோ­ண­மலை துறை­மு­கங்­களை கைப்­பற்­றிக்­கொள்­வ­தற்­காக உதவி செய்த நாடு­க­ளாகும். ஆனால் அரபு நாடுகள் இந்த நாட்டின் அபி­வி­ருத்­திக்கும் கல்­விக்கும் எந்த எதிர்­பார்ப்பும் இல்­லாமல் பாரி­ய­ளவில் உதவி செய்­தி­ருக்­கின்­றன. அந்த நாடுகள் ஒன்­றின்­கூட பெயர் இடம்­பெ­றாமல் இருப்­பது, அரபு நாடு ­களை விரக்­திக்­குள்­ளாக்கும் செய ­லாகும். குறிப்­பாக சவூதி அரே­பியா நாட்டின் பல்­வேறு அபி­வி­ருத்­தி­க­ளுக்­காக 4ஆயி­ரத்து 800 மில்­லியன் டொலர்­களை இல ங்கை அர­சாங்­கத்­துக்கு உத­வி­யாக வழங்கி இருக்­கின்­றது. அதே­போன்று குவைத் அர­சாங்கம் தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­காக 800 மில்­லி­யன்­களை வழங்­கி­யுள்­ளது. டுபாய் அர­சாங்கம் ஆயிரம் டொலர் மில்­லி­ய­னுக்கும் அதிகம் நாட்­டுக்கு உத­வி­செய்­தி­ருக்­கின்­றது. இவ்­வாறு இருக்­கையில் அரபு நாடு­களை புறக்­க­ணித்­தி­ருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடியாது.

அதனால் இதுதொடர்பாக ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் வெளிவிவ கார அமைச்சு ஆகியோருடன் கலந்துரையாடி இருக்கின்றேன். எனவே அரசாங்கம் இந்த பிழையை திருத்திக்கொள்ள நட வடிக்கை எடுக்க வேண்டும் என் றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55