ஹொங்கொங்கில் ஜனநாயககோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காராகள் ஹொங்கொங்கின் சர்வதேச விமானநிலையத்திற்குள் மூன்று நாள் முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மதியம் முதல் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சர்வதேச விமானநிலையத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து வருகின்றனர்.
மேலும் விமானநிலையத்தில் காணப்படும் சுற்றுலாப்பயணிகளிற்கு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுபிரசுரங்களையும் வழங்கி வருகின்றனர்.
உலகின் மும்முரமான விமானநிலையங்களில்ஹொங்கொங் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த விமானநிலையத்தை பயன்படுத்துகின்றனர்.இதுதவிர 200 நகரங்களிற்கான விமானசேவைகளும் இடம்பெறுகின்றன.
ஹொங்ஹொங்கில் கடந்த சில வாரங்களாக தொடர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே விமானநிலைய முற்றுகை போராட்டம் இடம்பெறுகின்றது.
சந்தேகநபர்களை சீனாவிற்கு நாடு கடத்தும் சட்டமூலத்திற்கு எதிராக ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் தற்போது ஜனநாயக கோரிக்கைகளாக விரிவடைந்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM