சவூதி அரேபியாவில் பணியாற்றும் பாகிஸ்தான் வைத்தியர்களை உடனடியாக வெளியேற அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தானில் எம்.எஸ். மற்றும் எம்.டி. போன்ற முதுகலை வைத்தியப்படிப்பின் தரம் மற்றும் பயிற்சி சிறப்பானதாக இல்லை என கூறி அதன் அங்கீகாரத்தை சவூதி அரேபியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் இரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக சவூதி அரேபிய அரசாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானின் முதுகலை வைத்திய மேற்படிப்பு, சவூதி அரசின் சுகாதார ஆணையத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்புடையதாக அல்ல என்பதால் அங்கு எம்.எஸ்., எம்.டி படித்துவிட்டு சவூதியில் பணியாற்றுபவர்களின் ஒப்பந்தத்தை s
சவூதி அரேபியாவின் இந்த அதிரடி முடிவு நூற்றுக்கணக்கான வைத்தியர்களை பணியிழக்க செய்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் சவூதி அரேபியாவிலுள்ளனர்.
எனவே அங்கு இருக்கும் பாகிஸ்தான் வைத்தியர்களை உடனடியாக வெளியேறும்படி சவூதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சுகாதார சிறப்புக்களுக்கான சவூதி ஆணையம் (எஸ்.சி.எப்.எச்.எஸ்) அங்குள்ள பாகிஸ்தான் வைத்தியர்களுக்கு பணி நீக்கம் செய்யப்பட்ட தற்கான கடிதங்களை அனுப்பியுள்ளன.
அந்த கடிதத்தில் “தொழில்முறை தகுதிக்கான உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. காரணம், எஸ்.சி.எப்.எச்.எஸ் விதிமுறைகளின்படி பாகிஸ்தானிலிருந்து பெறப்பட்ட உங்கள் முதுகலை பட்டம் ஏற்றுக்கொள்ளப் படாது” என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரசின் இந்த நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ள அலி உஸ்மான் என்ற பாகிஸ்தான் வைத்தியர் இதுகுறித்து தெரிவிக்கையில், “லாகூர் வைத்திய பல்கலைக்கழகத்தில் 5 வருடம் மேற்படிப்பு முடித்தேன். அங்குள்ள பொது வைத்தியசாலையில் பயிற்சி பெற்றபின் சவூதிக்கு பணியாற்ற வந்தேன். சவூதி சுகாதார அமைச்சகம் எனது ஒப்பந்தத்தை நீக்கியுள்ளது. இந்த நீக்கத்தால் எனது குடும்பம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மற்றொரு வைத்தியர் தெரிவிக்கையில், “இந்தியா, எகிப்து, சூடான் மற்றும் பங்காள தேசம் ஆகிய நாடுகள் வழங்கும் அதே பட்டப்படிப்பு திட்டத்தை தான் பாகிஸ்தானும் வழங்குகிறது. ஆனால் பாகிஸ்தானை மட்டும் புறக்கணிப்பது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.
சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் உடனடியாக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் பாகிஸ்தானில் உள்ள வைத்திய பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பேராசிரியர் கள் சவூதி அரேபியாவின் குற்றச்சாட்டை தீர்க்கமாக நிராகரித்து உள்ளனர்.
இதற்கிடையில் சவூதி அரேபியாவை தொடர்ந்து, கட்டர், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகளும் பாகிஸ்தானில் முதுகலை படித்த வைத்தியர்களை பணியில் இருந்து நீக்கி, உடனடியாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM