இணையத்தள மீன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக, கையடக்க தொலைபேசி வழியாக மீன்கள் வாங்குவதற்கு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த இந்திய தமிழக மீன்வளத்துறை முடிவு செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இணையத்தளம் மூலம் பதிவு செய்து மீன்களை வாங்குவதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மீன்வளத் துறை சார்பில் www.meengal.com என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம், மாதந்தோறும் 2 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இணையத்தள மீன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக, புதிய செயலியைத் தொடங்க தமிழக மீன்வளத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, தனியார் நிறுவனத்தின் மூலம் செயலி ஒன்றை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; “ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இணைய தளத்தை வழக்கமான வாடிக்கையாளர் மட்டும்தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன், இணைய தளத்துக்குச் சென்று மீன்களை பதிவு செய்வதைவிட, கையடக்க தொலைபேசியில் ஒரு செயலி இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சுலபமாக இருக்கும் என்று தோன்றியது.
எனவே, வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய செயலியை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். தனியார் நிறுவனத்தின் மூலம் புதிய செயலியை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த செயலியை நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM