எதிர்வரும் நவம்பர் மாதத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி, சரியான தீர்வை நீங்கள் எடுப்பீர்களாக இருந்தால் இந்த தீர்வு இலங்கை மக்களுக்கும்,உங்களுக்கும் சரியான தீர்மானமாக இருக்குமாக இருந்தால் நான் மீண்டும் வந்து மன்னாரில் மாத்திரமல்ல இலங்கையில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்த வீட்டு பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுத்தருவேன் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
-மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஜேசப்வாஸில் நிர்மாணிக்கப்பட்ட 239 ஆவது மாதிரி கிராமமான ஜோசப்வாஸ் நகர் மற்றும் 230 ஆவது மாதிரிக்கிராமமான ஜேசப் புரம் ஆகிய இரண்டு மதிரிக்கிராமங்கள் திறந்துவைக்கப்பட்டது.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மேகன்ராஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் றிஸாட் பதியுதீனின் செயலாளர் றிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம்.முஜாகிர், ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு அமைச்சினை நான் கடந்த 2015 ஆம் ஆண்டு பொறுப்பெடுத்தேன்.நான் அமைச்சினை பொறுப்பெடுக்கும் போது ஏற்கெனவே இருந்தவர்களுக்கு கூட தெரிந்திருக்கவில்லை இந்த நாட்டிலே எத்தனை நபர்களுக்கு வீடு தேவை என்பது.
நான் அனைத்து அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்தேன்.இந்த நாட்டிலே காணப்படுகின்ற வீடுகளின் குறைபாடுகளை தயவாக எனக்கு சமர்ப்பிக்குமாறு கோரி இருந்தேன்.
அதன் அடிப்படையில் 25 இலட்சம் வீடுகள் தேவைப்பவது தெரிய வந்துள்ளது.25 இலட்சம் குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில், நாங்கள் உடனடியாக இன்னும் ஓர் தீர்மானத்திற்கு வந்தோம்.இந்த வீடுகளை அமைப்பதற்கு அடுத்த கட்டமாக ஒரு வேளைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தோம்.
எதிர்கால நோக்கத்தோடு எமது வேளைத்திட்டங்களை நாங்கள் வரிசைப்படுத்தியுள்ளோம்.
முதல் கட்டமாக 2,500 வீடுகளையும், 2 ஆம் கட்டமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5 ஆயிரம் வீடுகளையும், 3 ஆம் கட்டமாக 10 ஆயிரம் வீடுகளையும் அமைக்க உள்ளோம்.
உடனடியாக வெற்றி காண்பதற்காக குறித்த வேளைத்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.
அதிலே முதல் கட்டமாக 8,500 வீடுகளை இம்மாதம் செப்டெம்பர் மாதம் கட்டி முடிக்க திட்டமிட்டிருந்தோம்.
எமது நாட்டிலே காணப்படக்கூடிய விடையங்களை நான் செய்ய வேண்டும்.சர்வதேச நாடுகளுடன் பெரிய தொடர்பு இருப்பதாக கூறுகின்றார்கள் என்றால் ஏன் உருவாக்கவில்லை. உங்களை பார்த்து நான் கூறுகின்றேன் எதிர் வரும் நவம்பர் மாதத்திலே சரியான தீர்மானம் நீங்கள் எடுப்பீர்களாக இருந்தால் நவம்பர் மாதத்திலே நாங்கள் ஆட்சிக்கு வந்து கடந்த 10 வருடங்களாக இங்கு அமுல் படுத்தப்படாத சர்வதேச நிதி சம்மேளனத்தை 6 மாத காலப்பகுதிக்குள் உருவாக்கி வடக்கு கிழக்கில் உங்களை தேடி உங்கள் காலடிக்கு வந்து அபிவிருத்திகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வது வேறு யாரும் இல்லை சஜீத் பிரேமதாஸ என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
-நிவாரணம் பற்றி பேசுகின்றார்கள்.நிவாரணம் பற்றி பேசியவர்கள் அன்று நாட்டு மக்கள் பற்றி சிந்திக்க மறந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் வெளிநாடுகளுக்கு மாத்திரம் தேவையான அளவு சென்றார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று 5 அல்லது 7 என்கின்ற நட்சத்திர விடுதிகளிலே குடும்பமாக கும்மாளம் அடித்தார்கள்.
குடும்பமாக இவர்கள் கும்மாளம் அடித்தார்களோ தவிர நாட்டு மக்களை பற்றியோ,கட்டு மக்களின் பிரச்சினை பற்றியே அவர்கள் அங்கே கருதவில்லை.
அவர்கள் இன்று வெட்டி வீராப்பு பேசிக்கொண்டு மீண்டும் ஒருமுறை ஆட்சியை தட்டிப் பறிக்கக்கூடிய வீணான இந்த உதவாக்கரைகளினால் அன்று மக்களைப்பற்றி சிந்திக்கவில்லை. குடும்ப ஆட்சியை கொண்டு வந்தார்கள்.சுபபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
ஒரு காலத்திலே ராஜா வாழக்குடிய அளவுக்கு சுகபோக வாழக்கையை நாட்டினுடைய மக்கள் மூலமாக பெற்ற வரிப்பணத்தின் மூலம் வாழ்ந்தார்கள்.
எதிர்வரும் நவம்பர் மாத்ததில் சரியான தீர்மானத்தை எடுத்து எங்களை ஆட்சிக்கு கொண்டு வரும் பொழுது நான் அவர்களைப் போல் ராஜாவாக நடந்து கொள்ள மாட்டேன். தற்போது உடுத்தியுள்ள இந்த உடையுடன் உங்களை தேடி வருவேன். உங்களின் பிரச்சினைகளை அடையாளம் காணுவேன். உங்களுடைய பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை பெற்று தருவேன்.நல்ல ஆட்சியை நாடளாவிய ரீதியில் உங்களுக்கு ஏற்படுத்தி தருவேன்.
நவம்பர் மாதத்திலே சரியான தீர்மானத்தை எடுங்கள்.நாங்கள் மீண்டும் இந்த நாட்டு மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜேசப்வாஸில் நிர்மாணிக்கப்பட்ட 239 ஆவது மாதிரி கிராமமான ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் 67 வீடுகளும்,230 ஆவது மாதிரிக்கிராமமான ஜேசப் புரம் மாதிரிக்கிராமத்தில் அமைக்கப்பட்ட 28 வீடுகள் உள்ளடங்களாக 95 வீடுகள் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டதோடு தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள், சுய தொழில் உபகரணங்கள்,கடன் திட்டத்திற்கான காசோலைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM