அமெரிக்காவின் தேசிய விலங்காக காட்டெருமையை ஜனாதிபதி பாராக் ஒபாமாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் காட்டெருமைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிற காரணத்தினால் அவ்விலங்கினத்தை தேசிய விலங்காக பிரகடனம் படுத்தியுள்ளார்.
மேலும், காட்டெருமை இனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் மிஸ்ஸிஸிப்பி மாநிலம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் இலட்சக்கணக்கில் இருந்த காட்டெருமை தற்போது பெருமளவில் குறைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலும் வேட்டையாடப்படுவதனாலேயே காட்டெருமைகள் இனம் அங்கு குறைந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
எனவே, காட்டெருமையின் பாரம்பரியம், அவற்றினால் கிடைக்கும் பொருளாதாரம் போன்றவை குறித்து அதிக கவனம் செலுத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, எல்லோஸ்டோன் என்ற பூங்காவில் காட்டெருமைகளின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்தவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM