அமெரிக்கா - தென்கொரியா மேற்கொண்ட கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியா இன்று அடையாளம் தெரியாத இரு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.
இரு வாரங்களில் வட கொரியா நான்காவது முறையாக இவ்வாறு செய்துள்ளது என தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தென் ஹ்வாங்ஹே மாகாணத்தில் இருந்து, கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியா மேற்கொண்ட கூட்டு ராணுவப் பயிற்சி குறித்த தனது அதிருப்தியை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது வட கொரியா.
இந்த வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சிகள் ஆடம்பரமாக நடைபெறவில்லை. எனினும், இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் ஆகியோருடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மீறுவதாக அமைந்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்கா, நாங்கள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதுடன்,தென் கொரிய மற்றும் ஜப்பானிய நட்பு நாடுகளுடன் நெருக்கமாக ஆலோசித்து வருகவும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM