முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாக செயற்படுகின்றார். அதற்காக அவரை ஒதுக்கிச் செயற்படும் நிலைப்பாட்டில் சுதந்திரக் கட்சியும் இல்லை. எனவே பேச்சுவார்த்தை ஊடாக அவரது பிரச்சினையை அணுகி அதற்கான தீர்வொன்றை எட்டவே நாம் முயற்சிக்கின்றோம் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் போலியானதும் மெய்யானதுமான பல பிரசாரங்கள் எழுந்துள்ளன. கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலலைக்கு கட்சி தள்ளப்பட்டது. எமக்குள்ள மக்கள் பலத்தை கொண்டு கட்சியை மீட்டுள்ளோம். அதனால் எமது நாட்டின் பலமிக்க கட்சிகளில் ஒன்றாக சுதந்திர கட்சியை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளோம்.
மக்களிடத்திலும் சுதந்திர கடசியின் நிலைப்பாடு தொடர்பில் சந்தேகமான நிலை ஏறபட்டிருக்க கூடும். ஆனால் சுதந்திர கட்சியின் மேதின கூட்டத்தினை பார்த்த பின்னர் மக்களிடத்தில் புது நம்பிக்ளை பிறந்துள்ளது. அதேபோன்று கிருலப்பனைக்கும் கூட்டம் சென்றது என்பதை நாம் மறுக்கவில்லை. சுதந்திர கட்சியில் பிளவுகள் மற்றும் வேறுபட்ட கருத்துக்கள் இருந்தது உண்மை.
அதனால் நாம் முற்றுமுழுதாக வேறுபட்டு சென்றுவிடவில்லை. மேதினத்தின் போது மக்களும் எமக்கான முழு ஆதரவை வழங்கும் வகையில் பெருந்திரளாக கூடியிருந்தனர். கட்சியில் பிளவை ஏற்டுத்த நினைத்தவர்களும் தற்போது கட்சியை ஒன்றுபடுத்த முற்படுகின்றனர் அதுவே எமது மேதின வெற்றியாகவும் அமைந்துள்ளது.
ஆனால் தற்போதும் வேறுபட்ட கருத்துக்கள் எண்ணங்கள் உள்ளன. அவற்றினால் கட்சி பிளவுபட்டுச் சென்றுவிடும் என்று இனி எவரும் எதிர்பார்க்க வேண்டாம். எமது கட்சியில் மட்டுமல்ல எந்த கட்சியி லும் பணிப்போர் இடையிடையே நிகழ்வதை தடுக்க முடியாது. அதனால் அவற்றை குறைத்து கட்சியின் தேர்தல் வெற்றியை நோக்காக கொண்டு சகல உறுப்பினர்களும் செயற்பட வேண்டும்.
மக்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர். அதனால் சேறு பூசல்கள் போன்ற செயற்பாடுகளை விடுத்து கட்சி உறுப்பினர்கள் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே நாம் சுதநத்திர கட்சியை பிளவுபடுத்தும் சதியிலிருந்து விடுபட முடியும்.
இவ்வாறிருக்கையில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனது தனிப்பட்ட கொள்கைக்கு அமைவான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். அதனால் அவரை வேறுபடுத்தி நாம் செயற்படபோவதில்லை. அவருடனான முரண்பாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலமே களைய வேண்டும் . அவரை வேறு தரப்பாக பார்க்கும் பட்சத்தில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM