பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க மக்கள் பிரதிநிதியா அல்லது கம்பனி பிரதிநிதியா? ; சபையில் திலகராஜ் கேள்வி

Published By: Digital Desk 4

31 Jul, 2019 | 08:13 PM
image

(ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

தோட்டத்தொழிலாளர்களுக்கான. 50ரூபா  கொடுப்பனவு தொடர்பில் சபை முதல்வர் வழங்கியிருக்கும் பதிலும் பிரதமர் அமைச்சரவைக்கு வழங்கியிருக்கும் முன்மொழிவும் வேறானவையாக இருக்கின்றது. 

அத்துடன் பெருந்தோட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் நவீன் திசாநாயக்க மக்கள் பிரதிநிதியா அல்லது கம்பனி பிரதிநிதியா எனவும் சந்தேகம் எழுகின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட எம்.பி எம். திலகராஜ் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன விசித்திரமான வினா ஒன்றை எழுப்பியுள்ளார். அதாவது அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தியாவது தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டும் என. அதற்கு பதிலளித்த சபை முதல்வர் தோட்டத் தொழிலாளர்களுக்கான 50ரூபா  கொடுப்பனவுக்காக அமைச்சரவை அனுமதி வழங்கியருப்பதாக கூறியுளலளார். 

ஆனால் அதற்காக பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் பெருந்தோட்டத்துறையை விருத்தி செய்ய 600 மில்லியனை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவே கூறப்பட்டுள்ளது. 

உண்மையில் 50 ரூபா  என்ற தொகைக்கு வெளியில் இலங்கையின் முன்னணி ஏற்றுமதி கைத்தொழிலான பெருந்தோட்ட துறையில் பணியாற்றும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள விவகாரம் அரசாங்கத்திடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதனை வலியுறுத்தவே நாம் அரசாங்கத்தை தலையிட செய்தோம். 

எனவே தற்போதைய முறைமையில் இருந்து பெருந்தோட்டத்துறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்கு பொறுப்பான அமைச்சர் நவீன திசாநாயக்க மக்களின் பிரதிநிதியாக அல்லாது கம்பனிகளின் பிரதிந்தியாகவே செயற்பட்டு வருகிறார். எனவே இந்த துறை சிறுதோட்ட தொழிலாக மாற்றப்படல் வேண்டும். எதிர்வரும் தேர்தல்கள் எதுவாயினும் எமது பிரதான நிலைப்பாடு இதுவாகவே இருக்கும். 

எனவே அரசாங்கம் பாராளுமன்றத்தில் உறுதி அளித்தவாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27