தனக்கு எதிராக செயற்படுவேரை கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தும் அரசாங்கம் - ஜே.வி.பி.

Published By: R. Kalaichelvan

31 Jul, 2019 | 04:11 PM
image

(ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஓர் அங்கமே உரிமை போராட்டம் மேற்கொண்ட வெளிவாரி பட்டதாரி மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலாகும் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தாக்குதல் உலகில் அனைத்து பிரதேசங்களிலும் இடம்பெறுகின்றது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அனைத்து தகவலும் தெரிவித்த பின்னரே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

அதனால் ஏனைய பயங்கரவாத தாக்குதலுடன் இதனை ஒப்பிடமுடியாது.

அத்துடன் அவசரகால சட்டம் இல்லாத நிலையிலே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் எதிர்காலத்திலும் பாதுகாப்பு தேவைகளுக்காக அவசரகால சட்டம் தேவை என தெரிவிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்பவர்களை தடுக்கவும் உரிமை போராட்டங்களை மேற்கொள்பவர்களை கட்டுப்படுத்தவுமே அரசாங்கம் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி வருகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17