ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறுதின தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

மொஹமட் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரரான 28 வயதுடைய மொஹமட் அப்துல் காதர் அசிம் என்பவரையே கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
சந்தேக நபர் பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமின் நுவரெலியாவில் இயங்கிவந்த பயிற்சி முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாகவும் பயங்கரவாத குழுவிற்கு உதவிகள் வழங்கியுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நுவரெலியாவின் கட்டுபெத்த பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் அவரை கைதுசெய்துள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM