(எம்.மனோசித்ரா)
நாட்டுக்குள் மிக விரைவில் பாரிய அரசியல் மாற்றம் உருவாகப் போவதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன, கோத்தாபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய முழு மூச்சுடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிவித்திகல தொகுதி மாநாடு நேற்றைய தினம் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் மாற்றத்தைப் போன்று மற்றுமொரு அரசியல் மாற்றம் இன்னும் ஓரிரு தினங்களில் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. மாகாணசபைத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் இவற்றில் கூட ஏற்படலாம். ஆனால் நாளை 30 ஆம் திகதிக்கு பின்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்த கூடிய நிலைமை இல்லை.
ஜனாதிபதித் தேர்தலையும் மாகாணசபைத் தேர்தலையும் அடுத்தடுத்து நடத்த வேண்டும். ஆனால் அவ்வாறான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. ஆகவே எதிர்வரும் நபம்பர் மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். அந்த தேர்தலில் நாம் தோல்வியடையக் கூடாது என்றும் கூறினார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM