கல்முனை பகுதியிலிருந்து அன்னமலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் இன்று சனிக்கிழமை(27) மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற வேளை தனியார் பஸ்ஸில் அதிகளவான மக்கள் பயணம் செய்துள்ள போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மேற்படி தாக்குதலினால் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
மேலும் பயணத்தை இடைநிறுத்திய தாக்குதலுக்குள்ளான பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட மக்கள் அநேகமானோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதை காண முடிந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM