பேயும் பிசாசும்

Published By: Priyatharshan

27 Jul, 2019 | 02:32 PM
image

ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி என்­பன இலங்­கையின் வர­லாற்றில் முக்­கிய கட்­சி­க­ளாக விளங்­கு­கின்­றன. இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்னர் இக்­கட்­சிகள் மாறி மாறி ஆட்சி பீட­ மேறி இருக்­கின்­றன. இந்­நி­லையில் இக்­கட்­சி­களின் செயற்­பா­டுகள் மற்றும் போக்­குகள் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் இருந்து வரு­கின்­றன.  ­கட்­சிகள் நாட்டின் அபி­வி­ருத்­திக்கு உரி­ய­வாறு வலு­ சேர்க்­க­வில்லை. நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்­வைப் பெற்­றுக் ­கொ­டுக்­க­வில்லை என்­கிற பர­வ­லான குற்­றச்­சாட்டு இருந்து வரு­கின்­றது. மலை­யக கட்­சிகள் உள்­ளிட்ட சிறு­பான்மைக் கட்­சிகள் இவ்­விரு பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுக்கும் மாறி மாறி ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றன. எனினும் இதற்கு உரிய பலனை சிறு­பான்மைக் கட்­சிகள் பெற்­றுக்­கொண்­ட­னவா  என்று சிந்­திக்­கு­மி­டத்து விடை திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை. தேர்தல் காலங்­களில் சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ர­வைப் பெற்­றுக்­கொண்டு பின்னர் அவர்­களைத் தூக்கி எறியும் பிழை­யான போக்கே பெரும்­பான்மைக் கட்­சி­க­ளிடம் அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றது என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை.

மலை­யக மக்கள் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு ஆத­ரவு வழங்­கு­வ­திலும் பார்க்க ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அதி­க­ளவில் ஆத­ரவு வழங்­கு­வ­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. அந்­த­ள­விற்கு இம்­மக்கள்  ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யைப் புறந்­தள்­ளு­வ­தற்குக் காரணம் என்ன என்­கிற கேள்­விக்கு விடைகள் பல காணப்­ப­டு­கின்­றன. ஸ்ரீல.சு. கட்சி மலை­யக மக்­க­ளுக்கு இழைத்த துரோ­கங்­களின் கார­ண­மாக அக்­கட்சி அவர்­களின் இத­யங்­களில் இடம் பி­டிக்கத் தவறி இருக்­கின்­றது என்­பதே கசப்­பான உண்­மை­.

வாக்கு

வாக்கு என்­பது ஒரு வேட்­டுக்கு சம­மா­ன­து என்­பார்கள். அர­சியல் உரி­மை­களில் வாக்­க­ளிக்கும் உரிமை என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. பிர­ஜைகள் வாக்­க­ளிப்­பதன் மூல­மாக ஆட்­சி­யா­ளர்­களைத் தெரிவு செய்­கின்­றார்கள். ஜன­நா­யக நாடு­களில் தேர்­தல்கள் முக்­கி­யத்­துவம் பெற்று விளங்­கு­கின்ற நிலையில் வாக்­க­ளிப்பு, தேர்­தல்கள் என்­ப­ன­வற்றின் ஊடாக மக்­களின் விருப்­பங்கள் பிர­தி­ப­லிக்­கின்­றன. வாக்­க­ளிக்கும் உரி­மை­யா­னது எல்லா வயது வந்­த­வர்­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்டும். லஸ்கி என்ற அறிஞர் வாக்­கு­ரிமை மட்­டுப்­ப­டுத்­தலை நிரா­க­ரித்­தி­ருக்­கின்றார். மேலும் மக்­களின் ஒரு பிரி­வி­ன­ருக்கு வாக்­கு­ரிமை மறுக்­கப்­ப­டு­வதன் மூலம் அர­சாங்க நலன்­களை அவர்கள் பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலையே ஏற்­படும். அர­சியல்  அதி­கா­ரத்தில் செல்­வாக்கு செலுத்த முடி­யாத மக்கள் குழுவின் மீது அர­சாங்­கத்தின் அக்­க­றையும் குறை­வா­கவே காணப்­படும் என்றும்  அறிஞர் லஸ்கி வலி­யு­றுத்தி இருக்­கின்றார்.  இந்தக் கூற்று முற்­றிலும் உண்­மை­யா­ன­து. 

மலை­யக மக்கள் நீண்­ட­கா­ல­மாக பிர­ஜா­வு­ரிமை மற்றும் வாக்­கு­ரிமை என்­பன இல்­லாத சமூ­க­மாக இருந்­தனர். இதனால் அவர்கள் மீதான அர­சாங்­கத்தின் அக்­கறை குறை­வாக இருந்­த­தோடு  நாதி­யற்ற சமூ­க­மாக நீண்­ட­ கா­ல­மாக மலை­யகம் இருக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. பிர­ஜா­வு­ரிமை மற்றும் வாக்­கு­ரிமை என்­ப­வற்றைப் பெற்­றுக்­கொண்­டதன் பின்னர் இம்­மக்­களை ஏறெ­டுத்துப் பலரும் பார்க்கும் நிலைமை ஏற்­பட்­டது.

வாக்கு என்­பது அர­சாங்­கத்தின் வீழ்ச்­சிக்கும் எழுச்­சிக்கும் உந்து சக்­தி­யாக அமை­கின்­றது. இந்­நி­லையில் மலை­யக மக்கள் சிறு­பான்­மை­யினர் என்ற ரீதியில் பெரும்­பா­ன்மைக் கட்­சி­க­ளுக்கு ஆத­ரவு வழங்கும் ஒரு போக்­கினை கொண்­டி­ருக்­கின்­றனர். மலை­யக கட்­சி­களின் கோரிக்­கை­க­ளுக்கு ஏற்ப பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுக்கு காலத்­துக்குக் காலம் தங்­க­ளது வாக்­கு­களை வழங்கி வரு­கின்­றனர். எனினும் வாக்­க­ளிப்பு என்­பது மலை­யக மக்­களைப்  பொறுத்­த­வ­ரையில் எந்­த­ள­வுக்கு சாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது? மலை­யகத் தலை­மை­களின் கோரிக்­கை­க­ளுக்கு ஏற்ப பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளித்­ததால் பெற்­றுக்­கொண்ட நன்மை என்ன? மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் அதி­க­முள்ள நிலையில் பெரும்­பான்­மைக் கட்­சிகள் இவற்­றுக்­கான தீர்­வினைப் பெற்றுக் கொடுத்­த­னவா?----போன்றவை பற்றிச்  சிந்­திக்­கையில் மலைய­லக மக்கள் நம்பி ஏமாந்த நிலை­மை­களே அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றன. பெரும்­பான்மை கட்­சிகள் தமது இலக்கு நிறை­வே­றி­யபின்  பல சந்­தர்ப்­பங்­களில் மலை­யக மக்­களை கை கழுவி இருக்­கின்­றன. `ஆற்றை கடக்கும் வரை அண்ணன் தம்பி; ஆற்றைக் கடந்த பின் நீ யாரோ? நான் யாரோ?’ என்ற போக்கே பெரும்­பான்மைக் கட்­சி­க­ளிடம் காணப்­ப­டு­வது ஒன்றும் புதிய விடய­மல்ல. 

சில மலை­யக அர­சி­யல்­வா­திகள் பெரும்­பான்மைக் கட்­சி­களின் கோர­முகம் தெரிந்­தி­ருந்தும் தமது சுய­இ­லா­பத்­துக்­கா­கவும் அமைச்சுப் பத­விக்­கா­கவும் பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுக்­காக வக்­கா­ளத்து வாங்­கு­வ­தையும் கூறி­யாதல் வேண்டும். இத்­த­கை­யோரை சமூ­கத்தின் துரோ­கிகள் என்­பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?.

ஐ.தே. கட்சி மற்றும் ஸ்ரீல.சு. கட்சி தொடர்பில் ஜே.வி.பி. போன்ற கட்­சிகள் தொடர்ச்­சி­யா­கவே விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றன. மாறிமாறி நாட்டை ஆட்சி செய்யும் இக்­கட்­சிகள் நாட்டின் வளங்­களைச் சுரண்­டு­வ­திலும் அர­சியல் இருப்­பைத் தக்க வைத்துக் கொள்­வ­திலும் அதி­க­மாக ஆர்வம் செலுத்தி வரு­கின்­றன. மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­ப­திலோ அல்­லது நாட்டை அபி­வி­ருத்திப் பாதைக்கு இட்டுச் செல்­வ­திலோ இக்­கட்­சி­க­ளுக்கு அக்­கறை இல்லை. இக்­கட்­சி­களின் செயற்­பா­டுகள் நாட்டைச் சீர­ழித்­தி­ருப்­ப­தோடு நாட்டு மக்­களின் ஒற்­று­மைக்கும் சவா­லாக உள்­ள­தாக ஜே.வி.பியின் முக்­கி­யஸ்தர் ஒருவர் ஏற்­க­னவே கூறி­யி­ருந்­ததும் இங்கு நோக்­கத்­தக்­க­து. இது ஒரு புற­மி­ருக்க, ஐ.தே. கட்சி, ஸ்ரீ லங்கா சு. கட்சி என்ற இரண்­டையும் நாம் நோக்­கு­கையில் ஸ்ரீ லங்கா சு. கட்சி தொடர்பில் மலை­யக மக்கள் பல­ரி­டையே அதி­ருப்­தி­யான வெளிப்­பா­டுகள் இருந்து வரு­வ­தனை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இதற்கு என்ன காரணம் என்று எண்­ணி­ய­போது பல்­வேறு விட­யங்­க­ளையும் அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஸ்ரீல.சு. கட்சி ஒரு தேசியக் கட்சி என்று சொல்­லப்­பட்­டாலும் அக்­கட்­சிக்கு ஒரு சிங்­கள பௌத்த அடிப்­படை காணப் ­ப­டு­கின்­றது. பல்­லின மக்கள் வாழும் இலங்­கையில் இந்த பௌத்த அடிப்­படை நிலை­யா­னது சாதக விளை­வு­க­ளுக்கு வலு­சேர்க்­குமா என்று நோக்க வேண்­டி­யுள்­ளது.

பௌத்­தமும் அர­சி­யலும்

ஸ்ரீல.சு. கட்­சியை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க உரு­வாக்­கினார். பௌத்த குரு­மார்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளித்து இவர் செயற்­பட்டார். அவர்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு தனது பய­ணத்தைத் தொடர்ந்தார். பௌத்­தத்­தையும் அர­சி­ய­லையும் இணைத்த ஒரு­வ­ராக பண்­டா­ர­நா­யக்க விளங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­து. அரசு வேறு, மதம் வேறு என்று இன்று நோக்­கப்­ப­டு­கின்­றது. தேசிய அர­சுகள் இவ்­வாறே இன்று உரு­வா­கி­யுள்­ளன. எனினும் மதமும் அர­சி­யலும் அன்று கலந்த நிலையில், அதனால் பல்­வேறு விளை­வு­க­ளையும் சந்­திக்­க­வேண்டி இருந்­தது. ஸ்ரீல.சு. கட்­சியின் போக்­குகள் சிறு­பான்மை மக்­க­ளி­டையே அதி­ருப்தி நிலைகள் பல­வற்­றையும் தோற்­று­வித்­தி­ருந்­தன.

தனிச் சிங்­களச் சட்டம் 

தனிச் சிங்­களச் சட்டம் என்­பது இந்­நாட்டின் வர­லாற்றில் ஒரு கறை­ப­டிந்த அத்­தி­யா­ய­மாக அமைந்­தது. இச்­சட்டம் சிறு­பான்மை மக்­க­ளி­டையே அதி­ருப்தி நிலைகள் பலவும் மேலெ­ழுவ­தற்கு உந்து சக்­தி­யா­கி­யது. பௌத்த பிக்­கு­மார்கள் 1950 களின் முற்­ப­கு­தியில் சங்­கங்கள் அமைத்து பின்னர் சங்­கங்­களின் ஒன்­றியங்களையும் நிறுவி புத்த ஜயந்­திக்­கான ஆரம்ப வேலை­களில் ஈடு­பட்­டனர். 

‘எக்சத் பிக்கு பெர­முன’ ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. பிக்­கு­களை ஒழுங்­க­மைத்து ஐ.தே.கவை தோற்­க­டிப்­ப­தற்­கா­கவே இவ்­வ­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. புத்த ஆணைக்­குழு அறிக்­கையில் கூறப்­பட்ட கருத்­து­களும் இவ்­வொன்­றி­யத்தின் முக்­கிய அம்­சங்­களில் அடங்கி இருந்­த­தாக புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி இருக்­கின்­றனர். அரசு அங்­கீ­கா­ரமும் ஆத­ரவும் பெற்று புத்த மதத்தைப் பேணுதல், கல்விச் சீர்­தி­ருத்­தங்கள், பௌத்த சொத்­து­க­ளுக்கு சலு­கைகள் போன்ற பல விட­யங்கள் இதில் உள்­ள­டங்கி இருந்­தன. மேலும் பௌத்த  பிக்­குகள் ‘சிங்­களம் மாத்­திரம்’ கொள்­கையின் பிர­சா­ரர்­க­ளா­கவும் செயற்­பட்­ட­தாகவும் தெரி­ய­வ­ரு­கின்­றது. பிக்­குகள் மொழிப்­பி­ரச்­சினை பற்றி மிகுந்த ஆர்வம் காட்­டி­ய­தாக குமாரி, ஜெய­வர்­தனா போன்றோர் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­ற­மையும் அவ­தா­னிக்­கத்­தக்­க­து.

ஸ்ரீல.சு. கட்­சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க 1956 ஆம் ஆண்டு தேர்­தலில் வெற்­றி­பெற்றார். இந்­நி­லையில் புதிய அர­சாங்­கத்தின் முதல் மசோதா சிங்­க­ளத்­தையே தனி­யொரு மொழி­யாக்­கு­வ­தாக ஆக்­கப்­பட்­டது. தனிச்­சிங்­களச் சட்­ட­மா­னது பல்­வேறு பாதக விளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்தும் என்று லெஸ்லி, கொல்வின் ஆர்.டி. சில்வா உள்­ளிட்ட பலரும் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தனர். இலங்­கைக்கு மிகப்­பெ­ரிய ஆபத்து வர உள்­ளது. அம்­மக்கள் தமக்கு அநி­யாயம் நடப்­ப­தாக உணர்ந்தால் அவர்கள் நாட்டில் இருந்து பிரிந்து போகக் கூட தீர்­மா­னிக்­கலாம் என்று லெஸ்லி கூறினார்.  சிங்­களம் மட்டும் சட்டம் எதிர்­பா­ராத விளை­வு­களைத் தரும் என்­பது கொல்­வினின் கருத்­தாக இருந்­தது. தனிச்­சிங்­களச் சட்டம் பல்­வேறு தழும்­பு­க­ளுக்கும் வித்­தி­டு­வ­தாக அமைந்­தது. இந்­நி­லையில் தமி­ழ­ரசுக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அ. அமிர்­த­லிங்கம் இது பற்றித் தெரி­விக்­கையில்;

”தனிச்­சிங்­களம் எனும் கொள்கை இந்த நாட்டில் பொது வாழ்க்­கையில் தமிழ் மொழியை அதற்­கு­ரிய ஸ்தானத்தில் இருந்து வெறு­மனே விலக்கி வைப்­பதை மட்டும் கரு­த­வில்லை. ஆனால் அது இந்த நாட்டின் தமிழ்மொழி பேசும் மக்­களை இலங்­கையின் அர­சியல், பொரு­ளா­தாரம் மற்றும் கலா­சார வாழ்க்கை என்­ப­ன­வற்றில் இருந்தே வெளியே தள்ளி வைக்­கி­றது என்று கூறி இருக்­கின்றார்.

ஸ்ரீல. சு. கட்­சியை உரு­வாக்­கிய பண்­டா­ர­நா­யக்க தனிச் சிங்­களச் சட்­டத்தை முன்­வைத்து தமிழ்மக்­களின் வெறுப்­பைச் சம்­பா­தித்­துக்­கொண்டார். மலை­யக மக்­களின் மனதில் இந்த வெறுப்புநிலை ஆழ­மா­கவே பதிந்­து­விட்­டது.

ஒப்­பந்­தங்கள்

ஸ்ரீல.சு. கட்­சியின் காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட சில ஒப்­பந்­தங்­கள் கார­ண­மாக இந்­திய வம்­சா­வளி மக்­களின் இருப்பு கேள்­விக்­கு­றி­யா­னது. இந்­திய வம்­சா­வளி சமூகம் துண்­டா­டப்­ப­டு­வ­தற்கு இந்த ஒப்­பந்­தங்கள் வலு சேர்ப்­ப­தாக அமைந்­தன எனலாம். 1964 மற்றும் 1974 காலப்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்­களின் விளை­வாக இந்­திய வம்­சா­வ­ளி­யினர் எத்­த­கைய விளை­வு­களை எதிர்­நோக்க நேர்ந்­தது என்­ப­தை பேரா­சி­ரியர் சோ. சந்­தி­ர­சே­கரன் தனது கட்­டுரை ஒன்­றிலே தெளி­வாகச் சுட்­டிக்­காட்டி இருக்­கின்றார். இதன் அடிப்­ப­டையில் நோக்­கு­கையில் 1964 ஆம் ஆண்டில் நாடற்­ற­வர்­களின் தொகை ஒன்­பது  லட்­சத்து 75 ஆயிரம் எனக் கொள்­ளப்­பட்டு இலங்கை மற்றும் இந்­திய அர­சுகள் பேச்­சு­வார்த்தை நடத்தி அவர்­களின் ஐந்து  லட்­சத்து 25 ஆயிரம் பேரை இந்­தி­யாவும் மூன்று  லட்சம் பேரை இலங்­கையும் ஏற்­றுக்­கொள்­வ­தென்று ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டது. 1974 ஆம் ஆண்டின் இலங்கை –இந்­திய ஒப்­பந்­தத்­தின்­படி எஞ்­சிய ஒரு  லட்­சத்து 50 ஆயிரம் பேரை இரு நாடு­களும் சம அளவில் பகிர்ந்து கொள்­ள­வேண்டும்  என்று முடி­வு­செய்­யப்­பட்­டது. எனவே இந்­தியா மொத்­த­மாக ஆறு  லட்சம் பேருக்கும், இலங்கை மூன்று  லட்­சத்து 75 ஆயிரம் பேருக்கும் குடி­யு­ரிமை வழங்க முடி­வா­னது. இந்த ஒப்­பந்­தங்கள் சர்­வ­தேச சட்­டப்­படி இரு நாடு­களும் தமக்­கு­ரிய கடப்­பா­டு­களை நிறை­வேற்­றக்­கோரி இருந்­தன.

ஒப்­பந்­தங்கள் சம்­பந்­தப்­பட்ட இந்­தியத் தமி­ழர்கள் அவர்­களின் தலை­வர்கள் போன்­றோ­ருடன் கலந்­தா­லோ­சித்து செய்­யப்­ப­ட­வில்லை என்று கண்­ட­னங்கள் பலவும் மேலோங்கி இருந்­த­மையும் யாவரும்  அறிந்ததே. இந்­திய அர­சாங்கம் ஆறு  லட்சம் பேரை ஏற்­றுக்­கொள்ள இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தது. எனினும் ஐந்து  லட்­சத்து ஆறா­யிரம் பேர் மட்­டுமே இந்­திய குடி­யு­ரி­மைக்­காக விண்­ணப்பம் செய்­தி­ருந்­தனர். அதே­வேளை, ஆறு  லட்­சத்து 25 ஆயிரம் பேர் இலங்கைக் குடி­யு­ரி­மைக்கு விண்­ணப்­பித்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­து 1987ஆம் ஆண்­ட­ளவில் மூன்று  லட்­சத்து 37 ஆயி­ரத்து 410 பேரும் அவர்­க­ளு­டைய பிள்­ளை­க­ளான ஒரு  லட்­சத்து 23 ஆயி­ரத்து 952 பேரும் இந்­தியக் குடி­யு­ரிமை பெற்று இந்­தியா சென்­றனர். இந்­தியா செல்ல வேண்­டிய 84 ஆயிரம் பேர் தவிர்ந்த ஏனையோர் இலங்கை குடி­யு­ரி­மையைப் பெற்­றனர். இதே­வேளை, இந்­தியா திரும்­பிய பெருந்­தோட்ட இந்­திய தொழி­லா­ளர்­க­ளுக்­கான முழு­மை­யான புனர்­வாழ்வுத் திட்­டங்கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. இவர்­களின் நிலை­மை­களை அறிந்த இலங்கை வாழ் இந்­தி­யர்கள், இந்­தியா செல்ல தயக்கம் காட்­டி­ய­தா­கவும் செய்­திகள் வலி­யு­றுத்­து­கின்­றன. முன்னாள் பிர­தமர் ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க இந்­தியத் தமி­ழர்­களை எவ்­வா­றேனும் இந்­தி­யா­வுக்கு அனுப்­பி­விட வேண்டும் என்­பதில் குறி­யாக இருந்தார். உயர்ந்­த­பட்சம் எத்­தனை பேரை அனுப்­பலாம் என்­பது இவரின் எண்­ண­மாக  இருந்­தது. இதில் அவர் வெற்­றியும் கண்டார். இந்­திய வம்­சா­வளி சமூகம் சிதை­வு­று­வதற்கு ஸ்ரீமா முக்­கிய கார­ண­கர்த்­தா­வாக இருந்தார் என்­ப­தனை எவரும் மறுக்­க­மு­டி­யாது. இத்­த­கைய நிலை­மை­களும் ஸ்ரீல.சு.கவின் மீது மலையக மக்­களை வெறுப்­ப­டையச் செய்­தி­ருந்­தன.

தேசிய மயம்

1972  காலப்­ப­கு­தியில் அதி­க­மான இந்­திய வம்­சா­வ­ளி­யினர் தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளாக மாறி இருந்­தனர். இந்­நி­லை­மை­யா­னது ஸ்ரீல.சு. கட்­சிக்கு வயிற்­றெ­ரிச்­சலை ஏற்­ப­டுத்தி இருந்­தது. இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரிடம் இருந்து எவ்­வாறு நிலத்தைப் பெற்­றுக்­கொள்­ளலாம் என்று ஆழ­மாகச் சிந்­தித்­தனர். பெருந்­தோட்­டங்­களைத் தேசிய மய­மாக்கும் நட­வ­டிக்­கைகள் முடுக்கி விடப்­பட்­டன. இவ்­வா­றாக தேசிய மய­மாக்­கி­ய­மை­, மலை­யகத் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான ஒரு  விட­ய­மே­. இன­வாத சிந்­த­னை­யுடன் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பதை பலரும் விளங்கிக் கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தது. மலை­ய­கத்தின் சில பகு­தி­களில் தோட்டத் தொழி­லா­ளர்கள் தோட்­டங்­களில் இருந்தும் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர். மனித நேய­மில்­லாத ஒரு கீழ்த்­த­ர­மான செய­லாக இது சிந்­திக்­கப்­பட்­டது. ஒரு தேசிய நிலப்­பு­ரட்சி நடக்­கின்­றது. இந் நட­வ­டிக்­கை­யின்­போது சிலர் சிர­மத்­திற்கு உள்­ளா­கத்தான் செய்­வார்கள் என்று அர­சாங்கம் சமா­தானம் கூறி­யது. ஸ்ரீல.சு.கவின் ஆட்சிக் காலத்தில் 1972  இல் பெருந்­தோட்­டங்­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­றதன் பின்னர் வேலை­யின்மைப் பிரச்­சினை, உணவுப் பற்­றாக்­குறை போன்­றவை தலை­தூக்­கின.

இதன் கார­ண­மாக மலை­யக மக்கள் பலர் வட மாகா­ணத்தில் சென்று குடி­யே­றினர். மலை­யக மாவட்­டங்­களில் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­களும் தொழி­லா­ளர்­களின் இடம்­பெ­யர்­வுக்குக் கார­ண­மாக அமைந்­தன. இவ்­வாறு சென்­ற­வர்கள் இலங்கைத் தமிழர் செறிந்து வாழும் வவு­னியா மற்றும் கிளி­நொச்சி மாவட்­டங்­களில் காலப் போக்கில் தமது இந்­திய, மலை­யக அடை­யா­ளங்­களை கைவிட்டு உள்ளூர் மக்­க­ளுடன் கலந்­து­விடும் போக்­குகள் காணப்­ ப­டு­வ­தா­கவும் புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி இருந்­தனர். ஸ்ரீல.சு. கட்­சியின் ஆட்­சிக்­கா­லத்தில் ஏற்­பட்ட கடு­ம் பஞ்சம் கார­ண­மாக தோட்டத் தொழி­லா­ளர்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர். பஞ்­சத்­தினால் சில தொழி­லா­ளர்கள் பிச்­சைப்­பாத்­திரம் ஏந்தி நகர்ப்­பு­றங்­களில் யாசிக்கும் நிலைக்கும் உள்­ளாகி இருந்­தமை புதிய விட­ய­மல்ல. இத்­த­னைக்கும் கார­ண­மாக ஸ்ரீல.சு. க. தொழி­லா­ளர்­களை நிர்­வா­ணப் ­ப­டுத்தி வீதியில் தள்­ளி­விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்­தது. எனவே மலை­யக மக்கள் எவ்­வாறு ஸ்ரீல.சு.        கவை ஆத­ரிப்­பார்கள் என்ற நியா­ய­மான கேள்வி மேலெ­ழுகின்­றது. சுய­ந­லத்­திற்­காக சிலர் வேண்­டு­மானால் இக்­கட்­சி­யுடன் இணைந்­தி­ருக்­கலாம். பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­குமா என்­ப­தைச் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

1972 ஆம் ஆண்டு அர­சியல் யாப்பு

சோல்­பரி அர­சியல் திட்டம் பல்­வேறு குறை­பா­டு­களைக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் எனவே புதிய அர­சியல் யாப்பு முன்­வைக்­கப்­பட வேண்­டு­மென்றும் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்று வந்­தன. 1956 இல் பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான மக்கள் ஐக்­கிய முன்­னணி  அர­சாங்கம் எதிர்க்­கட்­சியின் ஆத­ர­வுடன் இதற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டது. எனினும் போதிய ஆதர­வின்மை, மக்கள் ஐக்­கிய முன்­னணி பிள­வு­பட்­டமை, பண்­டா­ர­நா­யக்க 1959 இல் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டமை என்­பன போன்ற நிலை­மை­களால் இம்­மு­யற்சி ஈடே­ற­வில்லை. 1970 இல் இடம்­பெற்ற தேர்­தலில் ஸ்ரீல.சு. க. இட­து­சாரிக் கட்­சி­களின் கூட்­டணி பாரா­ளு­மன்றில் 2/3 பெரும்­பான்­மை­யைப் பெற்­றுக்­கொண்­டது. பிர­தமர் ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க புதிய அர­சியல் திட்டம் ஒன்­றை உரு­வாக்க முனைப்­புடன் செயற்­பட்டார். இதற்­கேற்ப 1972 மே 22 ஆம் திகதி தொடக்கம் முத­லா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு நடை­ மு­றைக்கு வந்­தது.

முத­லா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்­பா­னது சிறு­பான்­மை­ மக்­களின் நலன்­களைப் புறந்­தள்­ளி­ய­தா­கவே காணப்­பட்­டது. பௌத்த மதத்­திற்கு வலு சேர்த்­தி­ருந்­தது. பல்­லி­னத்­தன்மை கேள்­விக்­கு­றி­யாகி இருந்­தது. சோல்­பரி அர­சியல் திட்­டத்தில் பெய­ர­ளவில் காணப்­பட்ட சிறு­பான்­மையோர் காப்­பீடு இந்த அர­சியல்  திட்­டத்தில் நீக்­கப்­பட்­டது. சிங்­கள மொழியை மட்டும் அரச கரும மொழி­யாக்­கி­யதன் மூலமும் பௌத்த மதத்தை அரச மத­மாக ஆக்­கி­யதன் மூலமும் இந்­நாடு சிங்­கள பௌத்த நாடு என்ற கருத்து வளர்க்­கப்­பட்­டது. அடிப்­படை உரி­மைகள் பல்­வேறு குறை­பா­டு­களைக் கொண்­டி­ருந்­தன. அர­சியல் திட்­டத்தில் வலு வேறாக்கம் காணப்­ப­ட­வில்லை. மாறாக அது ஒன்­றாக்­கமே காணப்­பட்­டது. குற்­ற­வியல் நீதி ஆணைக்­குழு, அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் போன்­ற­வற்றை பலரும் வர­வேற்­க­வில்லை. சிறு­பான்­மை­யினர் எல்­லா­வித நம்­பிக்­கை­க­ளையும் இழந்து அர­சி­யலில் இருந்தும் அர­சாங்­கத்தில் இருந்தும் விலகிச் செல்லும் போக்கு வளர்ச்­சி­ய­டைய முத­லா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு கார­ண­மாகி இருந்­தது. மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யினர் ஸ்ரீல.சு. கவை இதனால் விரும்­ப­வில்லை. இந்­நி­லையில் சந்­தி­ரிகா ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்த காலத்தில் ஸ்ரீல.சு.கவின் போக்­கு­களில் சில மாற்­றங்கள் ஏற்­பட்­ட­தையும் மலை­யக மக்கள் சார்­பாக அவர் பல்­வேறு அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தையும் இங்கு குறிப்­பிட்­டாதல் வேண்டும். இதே­வேளை வடக்கு – கிழக்கு மக்களுக்கான உரிமை வழங்கல் குறித்தும் ஸ்ரீல.சு.க. சாதக  நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. 1965 இல் டட்லி –செல்வா உடன்படிக்கை கைவிடப்படுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்ப்பும் ஒரு காரணம்.

ஐ.தே.க. – ஸ்ரீல.சு.க. 

ஸ்ரீல.சு.க. மலையக மக்களை பலவழிகளிலும் நிர்வாணப்படுத்த முயன்றது போன்றே ஐதேகவும் மலையக மக்களை நிர்வாணப்படுத்த பல வழிகளிலும் முயற்சித்துள்ளது. பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பவற்றைப் பறித்தெடுத்து நீண்ட காலமாக அரசியலில் அநாதைகளாக மலையக மக்கள் இருக்கும் நிலைமையை ஐ.தே.க உண்டு பண்ணியது. இதன் தழும்புகள் இன்னும் மாறாத நிலையில் ஏனைய சமூகங்களுக்கும் மலையக சமூகத்துக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பதற்கும் இது காரணமாக அமைந்தது. ஐ.தே.கவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இனக் கலவரங்களால் மலையக மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டது. பலர் இந்தியாவிற்கும், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடம்பெயரும் நிலையை இது ஏற்படுத்தி இருந்தது. 1983 கறுப்பு ஜூலையை அவ்வளவு எளிதில் எவராலும் மறந்துவிட முடியாது. இக்கலவரம் குறித்து ஜே.ஆர். ஜெயவர்தனா  மீதும் விசனப்பார்வை இருந்து வருகின்றது. 1985 திம்பு பேச்சுவார்த்தை, 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்த யோசனை என்பவற்றை ஐ.தே.க. எதிர்த்தது. இந்திய –இலங்கை உடன்படிக்கையை (1987) ஸ்ரீல.சு.க. எதிர்த்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

ஐ.தே.க. – ஸ்ரீல.சு.க. இரண்டு கட்சிகளுமே மலையக மக்களுக்கு துரோகமிழைத்துள்ளன. இதில் ஒரு கட்சி பேய் என்றால் இன்னொரு கட்சி பிசாசு. நல்ல பேய், நல்ல பிசாசு என்று இல்லை. இரண்டு கட்சிகளுமே எம்மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை. பெரும்பான்மைச் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் கலாசாரத்தை மையப்படுத்தி இக்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. தமிழர்களுக்கு உரிமை வழங்குவதென்றால் இவர்களுக்கு வேப்பங்காயாகக் கசக்கின்றது. இரண்டு கட்சிகளும் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

- துரைசாமி நடராஜா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04