3 இந்திய வம்சாவளியினருக்கு போரிஸ் ஜோன்சன் அமைச்சரவையில் பதவிகள்

Published By: Daya

26 Jul, 2019 | 04:36 PM
image

இங்கிலாந்தில் 3 இந்திய வம்சாவளியினருக்கு போரிஸ் ஜோன்சன் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் பதவி ஏற்ற நிலையில், உள்த்துறை அமைச்சராக இந்திய வம்சாவளிப்பெண் 47 வயது பிரித்தி பட்டேல் பொறுப்பேற்றுள்ளார். மேலும் அலோக் சர்மா, ரிஷி சுனாக் ஆகிய இரு இந்திய வம்சாவளியினருக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது அமைச்சரவையில் வாய்ப்பு அளித்திருக்கிறார். 

போரிஸ் ஜோன்சன், தனது அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சர் பதவியை இந்திய வம்சாவளிப்பெண்ணான 47 வயதான பிரித்தி பட்டேலுக்கு  வழங்கியுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்தில் முதல் இந்திய வம்சாவளி உள்துறை அமைச்சர் என்ற பெருஐமயை பிரித்தி பட்டேல் பெற்றுள்ளார். 

பிரித்தி, லண்டனில் 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி குஜராத்தை பூர்விகமாக கொண்ட சுஷில், அஞ்சனா பட்டேல் தம்பதியரின் மகளாக பிறந்தவர். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் திரேசா மேயின் அமைச்சரவையில் , சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சர் பதவி வகித்தவர்.

வெளிவிவகாரத்துறையிடம் சொல்லாமல் இஸ்ரேல் அரசியல்வாதிகளுடன் பேச்சு நடத்தியதாக எழுந்த சர்ச்சையால், 2017 ஆம் ஆண்டு பிரித்தி தனது பதவியை துறந்தார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் விவகாரத்தில் திரேசா மே மேற்கொண்ட ஒப்பந்தம் மோசமானது என கூறி, அதற்கு எதிராக தொடர்ந்து வாக்களித்து வந்தார்.

புதிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தீவிர ஆதரவாளர். இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் நடத்தும் விழாக்களில் எல்லாம் தவறாமல் கலந்து கொள்பவர் என்ற பெயர் பிரித்தி பட்டேலுக்கு உண்டு. பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.

பிரித்தி பட்டேலின் கணவர் அலெக்ஸ் சாயர், பங்குச்சந்தை சந்தைப்படுத்தல் ஆலோசகர். இந்த தம்பதியருக்கு பிரெட்டி என்ற 11 வயதுடைய மகன் உள்ளார்.

மேலும் அலோக் சர்மா, ரிஷி சுனாக் ஆகிய இரு இந்திய வம்சாவளியினருக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது அமைச்சரவையில் வாய்ப்பு அளித்திருக்கிறார். 

அலோக் சர்மா, சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஷி சுனாக்கிற்கு குக்கு, கருவூலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அலோக் சர்மா (51), முந்தைய திரேசா மே அமைச்சரவையில் முதலில் வீட்டு வசதித்துறை பின்னர் வேலை வாய்ப்புத்துறை இராஜாங்க அமைச்சராக இருந்து வந்துள்ளார். ஆக்ராவில் பிறந்த இவர் 5 வயதாக இருந்தபோது பெற்றோருடன் இங்கிலாந்தில் குடியேறினார். அலோக் சர்மாவின் மனைவி சுவீடனை சேர்ந்தவர். இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இங்கிலாந்தில் பிறந்த ரிஷி சுனாக் (39), இன்போசிஸ் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். நாராயண மூர்த்தி, சுதா தம்பதியரின் மகள் அக்‌ஷதாவை இவர் மணந்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் முன்னைய திரேசா மே அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சர் பதவி வகித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42
news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46