சிங்கப்பூர் துறைமுகம் வந்தடைந்த கப்பலில் சுங்க திணைக்களஅதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் யானை தந்தங்களும், எறும்புதின்னி விலங்கின் செதில்களும் கைப்பற்றப்பட்டன.
ஆப்பிரிக்கா-கொங்கோவிலிருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாம் நாட்டுக்கு சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. குறித்த கப்பலில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக சிங்கப்பூர் சுங்க திணைக்களஅதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சிங்கப்பூர் துறைமுகம் வந்தடைந்த குறித்த கப்பலை சுங்கவரித் திணைக்களம் சோனைசெய்த போது
குறித்த கப்பலில் இருந்த 3 கொள்கலன்களை திறந்து பார்த்த போது 8.8 தொன் (8,800 கிலோ) எடை கொண்ட யானை தந்தங்களும், 11.9 தொன் எடை அளவிற்கு எறும்புதின்னி விலங்கின் செதில்களும் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் அவை அனைத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களின் மதிப்பு சுமார் 89கோடி இருக்கும் என்றும், இதற்காக 300 யானைகள் வேட்டையாடப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல், எறும்புதின்னி செதில்களின் மதிப்பு246 கோடி என்றும், இதற்காக 2 ஆயிரம் எறும்புதின்னிகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் வரலாற்றில் ஒரே நாளில் 8.8 தொன் எடைகொண்ட யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM