சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வழமைக்கு திரும்பும் அறுகம்பை

Published By: Vishnu

25 Jul, 2019 | 10:07 AM
image

இலங்கை சுற்­று­லாத்­து­றையின் சொர்க்க புரி­யாகத் திகழும் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள பொத்­துவில்- அறு­கம்பை கடற்­கரைப் பிர­தேசம் மீண்டும் சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கை­யினால் களை­கட்டத் தொடங்­கி­யுள்­ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தலின் பின்னர் இலங்­கையின் சுற்­று­லாத்­துறை வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்து. இதனால் பிர­சித்தி பெற்ற சுற்­றுலாப் பிர­தே­சங்­களில் ஒன்­றான அறு­கம்பை பிர­தேசம் ஸ்தம்­பி­த­மான நிலையில் காணப்­பட்­டி­ருந்­தது.

தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்று மூன்று மாதங்கள் கடந்த நிலையில், மீண்டும் அறு­கம்பை  பிர­தே­சத்தை நோக்கி  வரு­கின்ற  உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை அதி­க­ரிக்கத் தொடங்­கி­யுள்­ளது. இது­வொரு ஆரோக்­கி­ய­மான விட­ய­மாகும். இந்த நிலைமை மேலும் அதி­க­ரித்து  சுற்­று­லாத்­து­றையின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்கச் செய்யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு ­கின்­றது. அம்­பாறை மாவட்­டத்தின் அறு­கம்பை குடாக்­க­ரை­யா­னது, உலகப் புகழ்­பெற்ற கட­லலை நீர்ச்­ச­றுக்கல் (சேர்பிங்) விளை­யாட்­டுக்கு மிகவும் பிர­சித்தி பெற்ற ஓரி­ட­மாக­காணப்படுவதுடன் இது உலகில் 10 ஆவது இடத்­திற்குள் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மாவட்­டத்தில் இத­னுடன் அண்­டிய மற்­று­மொரு சுற்­றுலாப் பிர­தே­ச­மாக குமண வன­வி­லங்கு சார­ணா­லயம் அமைந்­துள்­ளமை மற்றும் சுற்­று­லாத்­து­றை­யி­னரை ஈர்க்கும் வகை­யி­லான கலா­சார பாரம்பரி­யங்கள், உணவு உற்­பத்­திகள், வனங்கள், மலைகள், குளங்கள், ஏரிகள், களப்­புகள், கடல் என அத்­தனை இயற்கை வளங்­களும் இப்­பி­ர­தே­சங்­களில் நிறைந்து காணப்­ப­டு­வது இங்கு வரும் சுற்­றுலாப் பய­ணி­களை ‍வெகு­வாக கவர்ந்­துள்­ளது எனலாம்.

பயங்­க­ர­வாதத் தாக்­குதல் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டி­ருந்த சுற்­று­லாத்­து­றையை மிக விரை­வாக வழ­மைக்கு கொண்டு வர­ுவ­தற்கு இலங்கை சுற்­றுலாத்துறை அமைச்சும் அர­சாங்­கமும் கடு­மை­யான பிர­யத்­த­னங்­களை முன்­னெ­டுத்து வந்­ததன் பல­னா­கவே இன்று சுற்­று­லாத்­துறை வழ­மைக்கு திரும்பக் கார­ண­மாக அமைந்­தது என இலங்கை சுற்­றுலா, கைத்­தொழில் மன்றத் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தெரி­வித்தார்.

சுற்­று­லாத்­துறையை மாத்­திரம் நம்பி தொழில் புரிந்து வரு­கின்ற பொத்­துவில் அறு­கம்பை ஹோட்டல் உரி­மை­யா­ளர்கள் மற்றும் ஏனைய தொழி­லா­ளர்கள் கடந்த குண்டுத் தாக்­கு­தலின் கார­ண­மாக அதிகம் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இத்­தாக்­குதல் கார­ண­மாக அதி­க­ள­வி­லான வெளி­நாட்டு மற்றும் உள்­நாட்டு சுற்­று­லாப் பய­ணிகள் அறு­கம்பை பிரதே­சத்­தி­லி­ருந்து வெளி­யேறி இருந்­தனர். இதனால் சுற்­றுலாத் தொழில்துறை மூலம் எதிர்­பார்த்த வரு­மா­னத்தை ஈட்ட முடி­யாது பெரும் கஷ்­ட­மான நிலைக்கு முகம்­கொ­டுத்­து­ வந்­தி­ருந்­தனர்.

பயங்­க­ர­வாத தாக்குதல்களை அடுத்து துரிதமாக நாட்டின் பாதுகாப்பை அரசாங்கம்  உறுதிப்படுத்தியது. அதன் விளைவாகவே மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி இலங்கைக்கு வரத்தொடங்கியுள்ளனர். இத னால் சுற்றுலாத்துறையை நம்பி தமது வாழ் வாதாரத்தை மேற்கொண்டு வந்த பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவுடன் இலங்கையில் அறிமுகமான கையடக்க...

2025-02-13 15:57:06
news-image

கருப்பு பணம் தூய்மைப்படுத்தலுக்கு எதிரான செயலணி...

2025-02-13 13:03:25
news-image

சியெட் இலங்கையில் 10வது முதற்தர S-I-S...

2025-02-12 16:03:43
news-image

தேசிய மனநல நிறுவகத்தின் வாழ்வை பிரகாசமாக்குகின்ற...

2025-02-12 12:46:29
news-image

Acuity Partners ஐ முழுமையாக கையகப்படுத்தி,...

2025-02-12 12:33:05
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் அதன் புதிய தவிசாளராக...

2025-02-11 18:03:15
news-image

MMBL மணி ட்ரான்ஸ்பர் பிரத்தியேக கிளையுடன்...

2025-02-11 17:50:42
news-image

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்தல்: வளர்ச்சியை...

2025-02-09 15:23:19
news-image

SLIM National Sales Awards 2024...

2025-02-08 18:18:45
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான...

2025-02-08 18:18:18
news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08