(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பொலிஸாரினால் தவறு ஏற்பட்டிருந்தால் அதுதொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி சம்பந்தமான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். அத்துடன் பிரபாகரன் மேற்கொண்ட அழிவுகளை இந்த பிரச்சினையுடன் சமம்படுத்த முடியாது என எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடா மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கம்பெனிகள் திருத்தச் சட்டமூல மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் பொலிஸாரினால் யாருக்காவது அநீதி ஏற்பட்டிருந்தால் அதுதொடர்பில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதிக்கு இதுதொடர்பில் அறிவுறுத்துவேன்.
அரசியல் வாதிகள் இதில் தலையிட்டதாலேயே இந்த பிரச்சினை உக்கிரமடைந்தது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் தலையிட்டது பொருத்தமில்லை. ஒருபக்க சார்பாக செயற்பட்டதால்தான் மற்ற தரப்பு சந்தேகப்பட்டு பிரச்சினை ஏற்பட்டது என்றார்.
இதன்போது ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பிய சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரும் அதில் தலையிடவில்லை. மாறாக பெளத்த துறவிகள் சிலரே அங்குவந்து இல்லாத பிரச்சினையை நிலைநாட்ட முயற்சித்தார்கள் என்றார்.
தொடர்ந்து மஹிந்த அமரவீர தெரிவிக்கையில், பொலிஸாரினால் தவறு ஏற்பட்டிருந்தால் அதுதொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி அதற்கு சம்பந்தமான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். அத்துடன் பிரபாகரன் இருந்தால் இவ்வாறான விடயங்கள் இருந்திருக்காது என சாள்ஸ். எம். பி. தெரிவித்திருந்தார். ஆனால் பிரபாகரன் இருந்த காலத்தில் இதனைவிட பாரிய விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பிரபாகரன் செய்த அழிவுகளை இதற்கு சம்பந்தப்படுத்த முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM