முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட உதயம் நகர் மற்றும் ஆதவன் நகர் ஆகிய இரண்டு மாதிரி கிராமங்களில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று புதன் கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டது.
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உதயம் நகர் மாதிரி கிராமத்திற்குள் 25 வீடுகளும் ஆதவன் நகர் மாதிரி கிராமத்தில் 25 வீடுகளுமாக மொத்தமாக ஐம்பது வீடுகள் அமைக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையிலே நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்க படுகின்ற மாதிரி கிராமங்கள் வரிசையிலே 223 ஆவது மற்றும் 224 மாதிரி கிராமங்களான உதயம் நகர் மற்றும் ஆதவன் நகர் கிராமங்களின் வீடுகளை மக்களிடம் இன்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மக்களிடம் கையளித்தார்.
அமைச்சர் சஜித் பிரேமதாச ஒவ்வொரு வீடுகளுக்கும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் நடந்து சென்று ஒவ்வொருவீடுகளாக நாடாவை வெட்டி மக்களுடைய வீடுகளை திறந்துவைத்து மக்களுடன் அன்பாக கலந்துரையாடினார்.
இன்று காலை 10.30 மணிக்கு இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெற்றதோடு பல்வேறு வாழ்வாதார திட்டங்கள் வீடமைப்பு கடன்கள் மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM