ஆபத்தான கொள்கலன்கள் விவகாரம் - விசாரணையை ஆரம்பித்தது பிரிட்டன்

Published By: Rajeeban

24 Jul, 2019 | 03:09 PM
image

இலங்கையில் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ள கொள்கலன்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் சூழல் உணவு மற்றும் கிராமிய விவகாரங்களிற்கான திணைக்களமான டெவ்ரா இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறிப்பிட்ட கொள்கலன்களிற்குள் உடலுறுப்புகளும் மனித பாகங்களும் காணப்படுகின்றன என்ற தகவல் குறித்து விசாரணை செய்வதாக தெரிவித்துள்ள டெவ்ரா எனினும் இலங்கை அதிகாரிகள் தங்களை இது தொடர்பாக தொடர்புகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளது.

கழிவுப்பொருட்கள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதை தடுப்பது குறித்து நாங்கள் உறுதியாகவுள்ளோம் என தெரிவித்துள்ள  பிரிட்டனின் சூழல் உணவு மற்றும் கிராமிய விவகாரங்களிற்கான திணைக்களத்தின் பேச்சாளர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்கள் இரண்டுவருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ளவேண்டிவரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிகாரிகளிடமிருந்து எங்களிற்கு அழைப்பு எதுவும் வரவில்லை ஆனால் நாங்கள் நேரடியாக தொடர்புகொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட கொள்கலன்களில் பிரிட்டனை சேர்ந்த மனித எச்சங்கள் காணப்படுவது உறுதிசெய்யப்பட்டால் பிரிட்டனின் என்எச் எஸ் மருத்துமனைகளின் கழிவுகளாக அவையிருக்கலாம் என தெரிவித்துள்ள டெலிகிராவ் குறிப்பிட்ட மருத்துவமனைகளே உடற்கூறியல் கழிவுகளை வெளியேற்றமுடியாமல் திணறுகின்றன என குறிப்பிட்டுள்ளது.

மெத்தைகள் என்ற போர்வையில் பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் மிகவும் ஆபத்தானவை என இலங்கையின் மத்திய சூழல் அதிகார சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34