ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் விவகாரம் : சந்தேக நபரை அடையாளம் காண காணொளியூடாக சாட்சியம் பதிவு செய்ய தீர்மானம்

Published By: Vishnu

23 Jul, 2019 | 09:03 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான உபாலி தென்னகோன் மற்றும் அவரது மனைவி மீதான தாக்குதல் நடத்தப்பட்ட  விவகாரத்தில் பிரதான சந்தேக நபராக கருதப்படும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கோப்ரல் லலித் ராஜபக்ஷவை அடையாள அணி வகுப்பில் அடையாளம் காட்ட, சாட்சியாளருக்கு காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் இரு வாரங்களுக்குள் தேவையான வசதிகளை செய்யுமாரு கம்பஹா நீதிவான் டீ.ஏ.ருவன் பத்திரண குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்று அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் இன்று கம்பஹா நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது சந்தேக நபரான  கோப்ரல் லலித் ராஜபக்ஷ, அடையாள அணிவகுப்புக்காக மன்றில் சிறை அதிகாரிகளால் ஆஜர் செய்யப்பட்டார். 

இதன்போதே மேற்கண்ட விடயத்தை நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவத்தார் அத்துடன் குறித்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்தி வைத்ததுடன், அதுவரை சந்தேக நபரான கோப்ரல் லலித் ராஜபக்ஷவையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00