9 வயதுக்குட்பட்ட சுப்பர் ப்ரொவென்ஷியல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் கண்டி அணியை 9 ஓட்டங்களால் வெற்றிகொண்ட காலி அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள 4 அணிகள் பங்குகொள்ளும் 19 வயதுக்குட்பட்ட சுப்பர் ப்ரொவென்ஷியல் கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 3 ஆம் மற்றும் 4 ஆம் இடங்களை பிடித்த கண்டி, காலி ஆகிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இடத்துக்கான போட்டி நேற்று தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் 302 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் நவோட் பரணவித்தான (91), சியான் கலிந்து (76) ஆகியோர் பிரகாசித்தனர்.
பந்துவீச்சில் லோஹன அரோஷ ஹெற்றிக் சாதனையுடன் 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் விக்கெட்டுக்கள் சரிய 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 9 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இப்போட்டியில் கண்டி அணி வீரரான லோஹன அரோஷ ஹெற்றிக் சாதனையுடன் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், துடுப்பாட்டத்திலும் 44 ஓட்டங்களை குவித்து தனது சகலதுறை ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தமை விசேட அம்சமாகும். இப்போட்டியில் இவர் விளையாடிய கண்டி அணி தோல்வியைத் தழுவியபோதிலும் லோஹன அரோசவுக்கு போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை வழங்கப்பட்டது.
(எம்.எம்.எஸ்.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM