இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு குப்பைகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் தம் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஹேய்லிஸ் நிறுவனம் நிராகித்துள்ளது.
இதேவேளை, வெளிநாட்டிலிருந்து கொள்கலன்களில் அடைத்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பெருமளவு கழிவுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அதன் முடிவில் இக்கழிவுகளை மீண்டும் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுங்கப்பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் நேற்றையதினம் ஹேய்லிஸ் நிறுவனம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை முன்னெடுத்ததுடன் ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது.
ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
Hayleys Free Zone yard வளாகத்தில் தற்போது சேமிக்கப்பட்டுள்ள 130 கொள்கலன் அளவிலான உபயோகப்படுத்தப்பட்ட மெத்தைகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகிவரும் பாதகமான பரப்புரைகள் தொடர்பில் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளதுடன் இந்த மெத்தைகள் Ceylon Metal Processing Corporation (Pvt) Limited இனால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களே இந்த சரக்குகளின் உண்மையான உரிமையாளர்கள் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, Hayleys Free Zone ஆனது Ceylon Metal Processing Corporation (Pvt) Ltd நிறுவனத்தினால் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ள மெத்தைகளை பதப்படுத்தி, மீள் ஏற்றுமதி செய்யும் நோக்கில் நியமிக்கப்பட்ட freight forwarder ETL Colombo (Pvt) Ltd உடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டது.
குறித்த சரக்கானது Hayleys Free Zone இற்கு freight forwarder ETL Colombo (Pvt) Ltd இனால் ஒப்படைக்கப்பட்டதுடன், இது Free Zone வளாகத்திற்கு வந்து சேரும் சரக்கானது Free Zone நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட வேண்டுமென்ற மையத்தின் ஒழுங்கு விதிகளின் பிரகாரம் இடம்பெற்றது.
சரக்கைப்பெறுபவர் Hayleys Free Zone Limited என CUSDEC தெரிவிக்கின்ற போதிலும் , அந்த சரக்கின் மீது எந்த சட்டரீதியான உரிமையும் இல்லை என்பதுடன் வணிக விலைப்பட்டியலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளமையைப் போல பாவிக்கப்பட்ட மெத்தைகளின் உரிமையாளரோ அல்லது இறக்குமதியாளோரோ தான் இல்லை என்பதனையும் Hayleys Free Zone Limited குறிப்பிடுகின்றது.
தற்போது கேள்விக்குள்ளாகியுள்ள 130 கொள்கலன் சரக்கானது அபாயகரமற்றது என குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் கவனமாக பரிசீலிக்கப்பட்டதன் பின்னரே Hayleys Free Zone yard இற்கு ஏற்கப்பட்டன என நிறுவனம் குறிப்பிடுகின்றது.
மொத்தமான 130 கொள்கலன் பாவிக்கப்பட்ட மெத்தைகளில் 29 கொள்கலன்களை இதுவரை Hayleys Free Zone பதப்படுத்தி மீள் ஏற்றுமதி செய்துள்ளது. பதப்படுத்தலைப் பொறுத்தவரையில், Hayleys Free Zone ஆனது மெத்தையை பிரித்தல் மற்றும் துணி, பஞ்சு, ஒட்டுக் கம்பளம் மற்றும் உருக்கினை வேறுபடுத்தி இவை ஒவ்வொன்றையும் Ceylon Metals இன் தேவைக்கேற்ப வேறு வேறு கொள்கலன்களின் பொதி செய்து மீள் ஏற்றுமதி செய்யும் சேவையை வழங்கி வருகின்றது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த மெத்தைகளை தனது சொந்த செலவில் பதப்படுத்தி விரைவாக மீள் ஏற்றுமதி செய்யும் முடிவை எடுத்துள்ளதாக Hayleys Free Zone தெரிவித்துள்ளது.
தற்போது துறைமுகத்தில் உள்ள 102 கொள்கலன்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை கொழும்பு துறைமுகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள 102 கொள்கலன்கள் தொடர்பிலான மேலதிக குற்றச்சாட்டுக்களை மறுக்கும் Hayleys Free Zone Limited, குறிப்பிட்ட 102 கொள்கலன்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
Hayleys Free Zone Limited இன் பணிப்பாளர் அசங்க ரத்நாயக்க இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
Hayleys Free Zone கொழும்பு துறைமுகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள 102 கொள்கலன்களுடன் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லை.
மேலும் குறிப்பிட்ட கொள்கலன்களின் இறக்குமதியாளரோ அல்லது சரக்கை ஏற்றுக்கொள்பவரோ அல்லது லொஜிஸ்டிக் சேவை வழங்குனரோ இல்லை” என்றார்.
இதேவேளை Hayleys PLC இன் தலைவரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டித்தகே இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,” நெறிமுறை மற்றும் சமூக பொறுப்புள்ள நிறுவனம் என்ற வகையில், Hayleys எங்கள் தாய்நாட்டிற்கு குப்பைகளை இறக்குமதி செய்வது போன்ற எந்த விதத்திலும் நியாயமற்ற செயலிலும் ஈடுபடாது எனக் குறிப்பிட்டார்.
Hayleys Free Zone இதுவரை கிடைத்த ஒத்துழைப்புக்கு முதலீட்டுச் சபைக்கு (BOI) இற்கு நன்றி தெரிவிப்பதோடு, Hayleys Free Zone yard இல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இந்த உபயோகப்படுத்தப்பட்ட மெத்தைகளை துரிதமாக பதப்படுத்தலை எளிதாக்க முதலீட்டுச் சபையுடன் இணைந்து செயற்படும்.
Hayleys Free Zone yard இல் உள்ள மெத்தைகள் சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாது என்பதனை உறுதிப்படுத்தும் பொருட்டு மத்திய சூற்றாடல் அதிகாரசபையுடன் நெருக்கமாக செயற்படும் என்பதனையும் நிறுவனம் குறிப்பிடுகின்றது.
இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து கொள்கலன்களில் அடைத்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பெருமளவு கழிவுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அதன் முடிவில் இக்கழிவுகளை மீண்டும் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுங்கப்பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்திருந்தார்.
சர்வதேச வர்த்தகம் தொடர்பில் வழங்கப்படும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி உபயோகப்படுத்தப்பட்ட மெத்தை மற்றும் வேறு கழிவுகள் அடங்கிய 241 கொள்கலன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 130 கொள்கலன்கள் இந்த இறக்குமதியுடன் தொடர்புடைய தரப்பினால் பொறுப்பேற்கப்பட்டு விட்டன. எஞ்சிய 111 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
சுங்கப்பிரிவினால் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அது குறித்த முழு விபரங்களையும் தற்போது வெளியிட முடியாத சூழ்நிலை உள்ளது, வெளிநாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களும் சுங்கப்பிரிவினால் பரிசோதனைக்குட்படுத்தப்படுவதில்லை.
அந்த வகையில் இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, சுதந்திர வர்த்தக வாய்ப்புக்களைப் பெற்றிருக்கும் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றினால் 130 கழிவு கொள்கலன்கள் பொறுப்பேற்கப்பட்டு விட்டன.இதனுடன் மேலும் இரு பிரபல தனியார் நிறுவனங்கள் தொடர்புபட்டுள்ளன.
கழிவு முகாமைத்துவம் மற்றும் அதன் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பில் 1989 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ‘பாசெல்’ ஒப்பந்தத்தில் இலங்கையும் அங்கத்துவம் வகிக்கின்றது. அதன்படி கழிவுகள் என்று இனங்காணப்பட்டவற்றை ஒரு நாட்டில் இறக்குமதி செய்யும் போது, அந்நாட்டின் மத்திய சுற்றாடல் அதிகார சபை அதன் சாதக, பாதகத்தன்மைகள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
அந்த வகையில் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுகள் குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது எமக்குத் தெரியாது. எனினும் நாம் இவ்விடயம் தொடர்பில் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி விசாரணைகளை ஆரம்பித்தோம்.
உலகளவில் மருத்துவக் கழிவுகள், இலத்திரனியல் கழிவுகள், அணுக் கழிவுகள் உள்ளிட்ட பெருமளவான கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவை பல மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் பின்னணியில் உள்ள ஆபத்து இன்னமும் புரிந்துகொள்ளப்படவில்லை. ஆனால் அனைத்து அரசாங்கங்களிடமும் நாங்கள் இதுபற்றி எடுத்துக்கூறி வந்திருக்கிறோம்.
இந்நிலையில் இதுகுறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதன் முடிவில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகளை மீள் ஏற்றுமதி செய்வதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்குத் தீர்மானித்திருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சுங்கத்திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுங்கப்பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM