தமிழ் தேசம் வாழ வேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும். நாங்கள் மொழி அடையாளம் கொண்டவர்கள் ஆகையினாலே பாரதி சொன்னது போல் ஏனைய மொழியை படியுங்கள் ஆனால் தமிழை தாயாக கொண்டிருங்களென வடக்கு மாகாணஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமையை தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் 'தேசிய பால் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்' வடமாகாண அங்குரார்ப்பண நிகழ்வு ஆளுநர் தலைமையில் இன்று (23) காலை யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் இந்த திட்டம் சுமார் 4 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெறுகின்றது. வடமாகாணத்தின் 5 பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக இந்த நிகழ்வு ஒரே நேரத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.
ஆரம்ப கல்விப் பிள்ளைகளின் போசணை நிலையை உயர்த்துவதற்காகவும், பிள்ளைகளை போசாக்குடனும் நலமுடனும் வளமுடனும் வாழவைக்கவேண்டும் என்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும் என்று ஆளுநர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM