ஒரு சமுதாயத்தின் முன்னேற்றமானது முற்று முழுதாக கல்வியிலேயே தங்கியுள்ளது.
அந்த வகையில் பின்தங்கியுள்ள நம் மலையக சமுதாயம் எழுச்சிபெற வேண்டுமாயின் கல்வியில் நாம் அனைவரும் அக்கறையுடன் கருத்தூன்றி கவனம் செலுத்தி நம் எதிர்கால சமுதாயத்தை சிறந்த முறையில் செப்பனிடும் பணியில் ஈடுபடவேண்டும் என கோப்பியோ அமைப்பின் இலங்கைக் கிளையின் கல்வித்துறைப் பொறுப்பாளர் வி.கே.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
கோபியோ அமைப்பின் இலங்கை கிளையினால் அண்மையில் புவக்பிட்டிய சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான இலவசத் தொடர் கருத்தரங்குகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
க.பொ.த. சாதாரணதரம், உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று உயர்ந்த தொழில் வாய்ப்புக்களைப் பெறுவது நமது சமூகத்தைப் பொறுத்தவரையில் காலத்தின் கட்டாயமாகும். அது மட்டுமல்ல கல்வியின் மூலம் சிறந்த ஒழுக்கத்தையும் உன்னதமான குணவியல்புகளையும், உயர்ந்த பண்பாட்டு விழுமியங்களையும்கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.
அதனை கருத்திற்கொண்டு இவ்விலவச தொடர் கருத்தரங்குகளை கோபியோ ஸ்ரீலங்கா எனும் உலகளாவிய இந்திய வம்சாவளி மக்கள் பேரவை ஆரம்பித்துள்ளது. அதனை கருத்திற்கொண்டு மாணவர்களும் இப்பிரதேச நம் சமுதாய மக்களும் சிறந்த முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
புவக்பிட்டிய சீ.சீ.தமிழ் மகா வித்தியாலய அதிபர் மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கோப்பியோ அமைப்பின் உறுப்பினரான விஜயலிங்கம் உரையாற்றுகையில்,
அவிசாவளை, புவக்பிட்டிய சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை மனதிற்கொண்டு கோப்பியோ ஸ்ரீலங்கா அமைப்பானது இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இப்பாடசாலை மட்டுமல்ல இதனைச் சூழவுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளும் பயன்பெறும் வகையில் எதிர்வரும் நவம்பர் இறுதிவரை க.பொ.த. (சா) தர மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்குகளை இலவசமாக நடாத்த முன் வந்துள்ளது.
நவீன உலகின் போக்கிற்கு ஏற்ப எதிர்காலத்தில் சிறந்ததோர் கல்விகற்ற சமூகமாக தேசிய நீரோட்டத்தில் இணைந்து நம்மக்களும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
''மலையக மக்களின் எதிர்காலம் கல்வியிலேயே தங்கியுள்ளது''
Published By: J.G.Stephan
23 Jul, 2019 | 01:00 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM