நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட்டால் ஐக்கிய தேசிய கட்சி நிச்சயம் வெற்றி பெறும்.
இன்னும் ஒரு மாத காலத்துக்குள் 50 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பேன். அவ்வாறு முடியாவிட்டால் எனது அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்துவிட்டு மக்களோடு மக்களாக இருப்பேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்தார்.
அட்டன் செனன் வெலிஓயா தோட்டத்தின் ஊடாக வட்டவளை நகருக்குச் செல்லும் 9.28 கிலோ மீற்றர் பாதை 32 கோடி ரூபா செலவில் “கார்பெட் போடப்பட்டு நேற்று மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் ஐ.தே.க. தவிசாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாசிம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இதில் தலைமை வகித்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தோட்டப் பகுதிகளில் பாதைகள் கார்பெட் போட்டு செப்பனிடப்படுவது ஐ.தே.க ஆட்சியில்தான் என்பதை சொல்லத் தேவையில்லை. கடந்த அரசாங்கத்தின் காலத்தின் பாதைகள் “கார்பெட்” செய்யப்பட்ட போதிலும் அவை தோட்டப் பகுதிகளில் இடம்பெறவில்லை.
அந்த வேலைத்திட்டத்தை ஐ.தே.க. தான் தோட்டங்களில் முன்னெடுத்து வருகின்றது. அதேபோல், தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 07 பேர்ச் காணியில் தனி வீடுகள் அதற்கான காணி உறுதிப் பத்திரங்கள், பிரதேச சபைகள் அதிகரிப்பு, பிரதேச செயலகங்கள் மற்றும் மலையகத்துக்கான தனியான அபிவிருத்தி அதிகார சபை என பல வேலைத் திட்டங்கள் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எனினும், தொழிலாளர்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். இதை அரசாங்கத்திடமும் பிரதமரிடமும் சுட்டிக்காட்டியபோது, மேலதிகமாக நாளாந்தம் 50 ரூபாவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் நவீன் திசாநாயக்கவும் இணக்கம் தெரிவித்திருந்தார்.
எனினும், கடந்த மே மாதம் வழங்குவதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவும் இன்றுவரை வழங்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரட்நாயக்க 50 ரூபா வழங்க முடியாது என தெரிவித்துள்ளார். அதேபோன்று அமைச்சர் நவீன் திசாநாயக்க 50 ரூபா தருவதாக இருந்தால் அமைச்சுப் பதவியை விட்டு விலகப் போவதாகக் கூறுகின்றார்.
அவர் விலகினால் எனக்கென்ன? விலகாவிட்டால் எனக்கென்ன? எமது மக்களுக்கு வாக்குறுதி அளித்தது போல, இன்னும் ஒரு மாத காலத்துக்குள் 50 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன்.
அவ்வாறு முடியாவிட்டால் எனது அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்துவிட்டு மக்களோடு மக்களாக இருப்பேன். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும்போது, ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். அவ்வாறு இணைந்து செயற்படும்போது கடந்த முறையைவிட அதிகமான வாக்குகளை பெற்றுக்கொடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM