காலநிலை சீராகி வெள்ள அச்சுறுத்தல் நீங்கினாலும் தொடர் மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை பிரதேச செயலக பிரிவுகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக இரத்தினபுரி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பலாங்கொடை பிரதேச செயலகப்பிரிவுகளில் மண்சரிவு இடம்பெறக்கூடிய பகுதிகளுக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி அவதான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பொருத் தமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது அவசியம்.
அதற்கென கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் அடையாளங்களையும் வெளியிட்டுள்ளது.
இதற்கிணங்க நிலத்தில் வெடிப்புக்கள், நிலத்தாழிறக்கம், நிலத்தில் குழிகள் ஏற்படுதல், மரங்கள் செடிகொடிகள் சாய்தல், மேலும் மின் மற்றும் தொலை பேசி தூண்கள் சரிவு, சுவர்கள் நிலம் ஆகியவற்றில் வெடிப்புக்கள் ஏற்படுதல், அவை விரிவடைதல் ,புதிய நீரூற்றுக்கள் உருவாகுதல், பழைய நீரூற்றுக்களில் நீர் திடீரென வற்றுதல் அல்லது இவற்றிலிருந்து கலங்கலான நீர் வெளியேறுதல் போன்ற அடையாளங்கள் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும்.
எனவே இவ்வாறான அடையாளங்கள் தென்பட்டால் உடனடியாக துறைசார் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அறிவுறுத்த வேண்டும்.அதே நேரம் உடனடியாக அவ்விடங்களை விட்டு வெளியேறுமாரும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM